செய்திகள் :

2-வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா? முன்னாள் இங்கிலாந்து வீரரின் அறிவுரைகள் உதவுமா?

post image

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 2) முதல் தொடங்குகிறது.

முதுகுப் பிடிப்பு காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறமாட்டார் எனக் கூறப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இருப்பினும், மற்ற பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்த்த தவறியதால், பும்ரா மீதான பணிச்சுமை அதிகரித்தது.

முதல் போட்டியில் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாததும் பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். அதன் பின், அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆசிய நாடுகளைத் தவிர்த்து, மற்ற நாடுகளில் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவாரா? பீட்டர்சனின் அறிவுரை உதவுமா?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய அணிக்காக இதுவரை குறைந்த அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், குல்தீப் யாதவ் நன்றாகவே செயல்பட்டுள்ளார். இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ், 56 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடர் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கொடுத்த அறிவுரைகள் குறித்து குல்தீப் யாதவ் கூறியதாவது: ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் இருந்தார். இங்கிலாந்து தொடர் குறித்து அவர் நிறைய விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஃபீல்டிங், ஆடுகளம் மற்றும் பேட்டர்களின் மனநிலை குறித்து அறிவுரை வழங்கினார். இங்கிலாந்தில் விளையாடுவதற்கு வீரர் ஒருவரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவரது அனுபவங்களைக் கூறினார்.

இங்கிலாந்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்துவார்கள். அவர்களுக்கு உறுதுணையாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வேண்டும் எனக் கூறுவார்கள். ஆனால், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற மனநிலையுடன் பந்துவீச வேண்டும் என பீட்டர்சன் கூறினார். 15 அல்லது 20 ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைத்தால், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் எனக் கூறினார் என்றார்.

On whether Kuldeep Yadav will be included in the Indian team's playing eleven for the second Test against England.

இதையும் படிக்க: உதவிப் பயிற்சியாளரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் கோரினார் தோனி!

கிரிக்கெட் வீரர் தோனி ‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் உரிமை கோரினார். தோனி மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பெரும்பாலும் ‘கேப்டன் கூல்’ என்றே அழைத்... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து; ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட... மேலும் பார்க்க

பயிற்சியில் ஈடுபடாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஈடுபடவில்லை.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ... மேலும் பார்க்க

இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை: முன்னாள் ஆஸி. வீரர்

இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வ... மேலும் பார்க்க

உதவிப் பயிற்சியாளரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அஸார் மஹ்முத், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக ஜேசன் க... மேலும் பார்க்க

இரவு முழுவதும் தூங்கவில்லை; டி20 உலகக் கோப்பை நினைவுகளை பகிர்ந்த ரோஹித் சர்மா!

டி20 உலகக் கோப்பையை வென்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அது தொடர்பான நினைவுகளை ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க