செய்திகள் :

'Captain Cool' என்ற பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்த தோனி!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரசிகர்கள் அவரது தலைமைத்துவத்தை மெச்சி அழைக்கும் 'கேப்டன் கூல் (Captain Cool)' என்ற பெயரை வர்த்தக முத்திரையாக (ட்ரேட் மார்க்) பதிவு செய்துள்ளார்.

இதனால் விளையாட்டுப் பயிற்சி, பயிற்சி மையங்கள், கோச்சிங் போன்றவற்றுக்கு அந்தப் பெயரைப் பயன்படுத்த பிரத்யேக உரிமையைப் பெற்றுள்ளார்.

Captain cool

வர்த்தக முத்திரைகள் பதிவேடு போர்டலின்படி, தோனியின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16ம் தேதி வெளியான அதிகாரப்பூர்வ வர்த்தக முத்திரை இதழில் இந்த பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதி செய்துள்ளார் தோனியின் வழக்கறிஞர் மன்சி அகர்வால்.

இந்த ட்ரேட் மார்க்கைப் பெறுவது எளிதானதாக இல்லை என இந்தியா டுடே தளம் கூறுகிறது.

முதன்முதலாக இதற்காக முயன்றபோது, வர்த்தக முத்திரைகள் சட்டத்தின் பிரிவு 11(1) இன் கீழ், 'ஏற்கனவே பதியப்பட்ட இதே போன்ற ஒரு முத்திரை இருப்பதால், இந்த சொற்றொடர் மக்களை குழப்பக்கூடும்' என ஆட்சேபனைத் தெரிவித்துள்ளது பதிவகம்.

கேப்டன் கூல்

எனினும் கேப்டன் கூல் என்ற சொல் தோனியுடன் தனித்துவமான பிணைப்பைக் கொண்டிருக்கிற்து என அவர் தரப்பில் வாதாடியுள்ளனர். நாடு முழுவதும் ரசிகர்களும் மீடியாக்களும் அவரை அந்தப் பெயரைப் பயன்படுத்தி அதனை தோனியின் பொது அடையாளமாக மாற்றிவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கேப்டன் கூல் என சொன்னாலே அது தோனியைக் குறிக்கும் வண்ணம் புதிய அர்த்தத்தைப் பெற்றுள்ளது என்றும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தளத்தில் மட்டும் இந்த பெயர் பயன்படுத்தப்படும்போது குழப்பம் ஏற்படாது என்றும் வாதாடியுள்ளார் மன்சி அகர்வால்.

இறுதியாக கேப்டன் கூல் என்பது வெறும் கவர்ச்சியான சொல்லாடல் மட்டுமல்ல, தோனியின் வணிக பிம்பத்துடன் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளது எனப் பதிவகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Rishabh Pant: "விபத்துக்குப் பின் கண்விழித்ததும் பண்ட் முதலில் கேட்டது..!" - பகிரும் மருத்துவர்

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்துக்குள்ளானார்.அதிர... மேலும் பார்க்க

Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்' - ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள்

ஜூன் 29, 2024-ல் இந்திய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியா... மேலும் பார்க்க

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி நடை

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை பேந்தர்ஸ் அணியை டக்வ... மேலும் பார்க்க

TNPL சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்.. மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி | Photo Album

Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dind... மேலும் பார்க்க

``தேவைப்படும்போது வீட்டுக்கே வந்து அழைப்பார்கள்" 2015-ல் பயிற்சியாளரிடம் ரிஷப் பண்ட் சொன்ன பதில்

இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இப்போட்டியில் இந்திய ... மேலும் பார்க்க

`2024 T20 WC பைனலில் அவரைப் பெரிதாக யாரும் பேசுவதில்லை’ - நோ கோலி, பும்ரா; ரோஹித் கூறும் வீரர் யார்?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அடுத்த ஆண்டே, டி20 உலகக் கோப்பையை வென்றது.அந்த இறுதிப்போட்டியில் கடைசி 24 பந்துகளில் வெறும்... மேலும் பார்க்க