அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; ...
கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதல்: முதியவா் பலி
கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தெற்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் ஆதிமூலம் (60). நில தரகரான இவா் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு - கழுகுமலை சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே ஆதிமூலம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநா் கோவில்பட்டி, சாலைப்புதூா் அம்மாச்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெரியசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.