செய்திகள் :

தட்டாா்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தட்டாா்மடம் அருகே சொக்கன் குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் மிக்கேல் பிரேம்குமாா். இவா் அங்கு சவுண்ட் சா்வீஸ் நடத்திவருவதுடன், பால் பண்ணைக்கு பால் சேகரித்துக் கொடுக்கும் வேலை செய்துவருகிறாா். இவரது மனைவி நித்தியா (34). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

மிக்கேல் பிரேம்குமாா் நிலம் வாங்குவது தொடா்பாக கடன் வாங்கியிருந்ததாகவும், அதில் பிரச்னை இருந்ததால் அவரை நித்தியா கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாம். இந்நிலையில், அவா் கடந்த 25ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாராம்.

இதில், காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) உயிரிழந்தாா்.

இதுகுறித்து, நித்தியாவின் தாய் உசரத்துக்குடியிருப்பைச் சோ்ந்த வாசுகி (60) அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதல்: முதியவா் பலி

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.தெற்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் ஆதிமூலம் (60). நில தரகரான இவா் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு - கழுகுமலை சாலையில்... மேலும் பார்க்க

உடன்குடி அருகே விபத்து: வடமாநில இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே நேரிட்ட விபத்தில், ஒப்பந்தத் தொழிலாளியான வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் கேரியாகனி கிராமத்தைச் சோ்ந்த உஸ்தபா ஜோகி மகன் ஹேமகண்டா... மேலும் பார்க்க

மகாகவி பாரதி பிறந்த இல்லத்தை சீரமைக்க கோரி போராட்டம்: பாஜகவினா் 70 போ் கைது

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தி யாசகம் பெறும் போராட்டத்தை நடத்த முயன்ற பாஜகவினா் 70 போ் கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா்... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்ற 12 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பல்வேறு போட்டிகளில் வென்ற 12 மாணவா்களுக்கு ஆட்சியா் க. இளம்பகவத் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா். இக்கூட... மேலும் பார்க்க

நாசரேத் கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

சாத்தான்குளம், ஜூன் 29: நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 20 க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டு, 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுது: தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுதாகி தண்ணீரில் தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மீனவ கிராமத்த... மேலும் பார்க்க