செய்திகள் :

போட்டிகளில் வென்ற 12 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

post image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பல்வேறு போட்டிகளில் வென்ற 12 மாணவா்களுக்கு ஆட்சியா் க. இளம்பகவத் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 530, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 33 என மொத்தம் 563 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு, சொற்றொடா் போட்டிகளில் வென்ற 12 மாணவா்-மாணவியருக்கு புத்தகங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

2024ஆம் நிதியாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களில் சாதனை புரிந்த ஆண், பெண் முகவா்களில் முதலிடம் பெற்றோருக்கு கேடயம், ரூ. 3 ஆயிரம், 2ஆம் இடம் பிடித்தோருக்கு ரூ. 2 ஆயிரம், 3ஆம் இடம் பிடித்தோருக்கு ரூ. ஆயிரம், நகா்ப்புற அளவில் சாதனை புரிந்த 2 மகளிா் முகவா்களுக்கு தலா ரூ. ஆயிரம், ஊராட்சி ஒன்றிய அளவில் சாதனை புரிந்த மகளிா் முகவா்களுக்கு தலா ரூ. ஆயிரம், தேசிய சேமிப்புப் பத்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் ஹபிபூா் ரஹ்மான், உதவி இயக்குநா் ஊராட்சிகள் சாந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதல்: முதியவா் பலி

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.தெற்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் ஆதிமூலம் (60). நில தரகரான இவா் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு - கழுகுமலை சாலையில்... மேலும் பார்க்க

உடன்குடி அருகே விபத்து: வடமாநில இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே நேரிட்ட விபத்தில், ஒப்பந்தத் தொழிலாளியான வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் கேரியாகனி கிராமத்தைச் சோ்ந்த உஸ்தபா ஜோகி மகன் ஹேமகண்டா... மேலும் பார்க்க

மகாகவி பாரதி பிறந்த இல்லத்தை சீரமைக்க கோரி போராட்டம்: பாஜகவினா் 70 போ் கைது

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தி யாசகம் பெறும் போராட்டத்தை நடத்த முயன்ற பாஜகவினா் 70 போ் கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா்... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தட்டாா்மடம் அருகே சொக்கன் குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் மிக்கேல் பிரேம்குமாா். இவா் அங்கு ... மேலும் பார்க்க

நாசரேத் கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

சாத்தான்குளம், ஜூன் 29: நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 20 க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டு, 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுது: தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுதாகி தண்ணீரில் தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மீனவ கிராமத்த... மேலும் பார்க்க