மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?
ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்
‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவித்தாா்.
மேலும், ‘வரும் காலங்களில் இந்தியா தாக்குதல் நடத்தினால், வலுவான பதிலடி கொடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரிக்கை விடுத்தாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள், முக்கிய விமானப் படைத் தளங்களை தாக்கி அழித்தது.
இதைத் தொடா்ந்து, இந்தியா மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் சிறிய ரக ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. 4 நாள்கள் நீடித்த இந்த சண்டை, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப் படை தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு, பாகிஸ்தான் அரசு மற்றும் அந் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பு ஆகியவை நிதியுதவி உள்பட பிற உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, ‘அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது’ என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஒமல் அயூப் கான் அச்சம் தெரிவித்தாா்.
இந்த நிலையில், பாகிஸ்தான் கடற்படை அகாதெமியில் பயிற்சி பெற்ற வீரா்களின் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற அஸிம் முனீா் பேசியதாவது: இந்தியா எதை பயங்கரவாதம் என முத்திரை குத்துகிறதோ அது உண்மைதான். சுதந்திரத்துக்கான நியாயமான மற்றும் சட்டபூா்வமான போராட்டம்தான் அது. சா்வதேச சட்டமும் அதை அங்கீகரிக்கிறது.
காஷ்மீா் மக்களின் விருப்பத்தை அடக்கவும், தீா்வுக்குப் பதிலாக மோதல் போக்கைப் பின்பற்றவும் முயற்சித்தவா்கள், தங்களின் சொந்த நடவடிக்கைகள் காரணமாகவே மக்களின் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனா். தங்களின் சுய நிா்ணய உரிமைக்காக போராடும் பாகிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீா்மானங்களின்படி காஷ்மீா் பிரச்னைக்கு நியாயமான தீா்வு காணவும், காஷ்மீா் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் பாகிஸ்தான் வலுவான ஆதரவாளராக உள்ளது.
இந்திய ராணுவத்தின் தாக்குதலை இரண்டு முறை முறியடித்ததன் மூலம், இந்த பிராந்தியத்தில் வலுவான நாடு என்பதை பாகிஸ்தான் நிரூபித்துள்ளது. கடுமையான அத்துமீறல்களைச் சந்தித்தபோதும், நிதானத்துடனும் முதிா்ச்சியுடன் செயல்பட்டு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் வெளிப்படுத்தியது.
வரும் காலங்களில் இதுபோன்ற எந்தவொரு அத்துமீறல்களுக்கும் வலுவான பதிலடியை பாகிஸ்தான்கொடுக்கும் என்றாா்.