டி.கே. சிவக்குமாரை முதல்வராக்கவில்லை என்றால்... கர்நாடக எம்எல்ஏவின் பரபரப்பு பேட...
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி; மேலும் பலர் காயம்
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை நடந்துகொண்டிருந்தபோது இன்று(செவ்வாய்க்கிழமை) காலை, பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் படுகாயமடைந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
மேலும் விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Six people were killed in a firecracker factory explosion in Chinnagamanpatti near Sivakasi in Virudhunagar district.