செய்திகள் :

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி; மேலும் பலர் காயம்

post image

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை நடந்துகொண்டிருந்தபோது இன்று(செவ்வாய்க்கிழமை) காலை, பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் படுகாயமடைந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும் விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Six people were killed in a firecracker factory explosion in Chinnagamanpatti near Sivakasi in Virudhunagar district.

வாழப்பாடி அருகே விவசாயி கொலை: சகோதரியின் கணவர் நண்பருடன் கைது!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவரே தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்துள்ளதால், இருவரையும் வாழப்பாடி போலீஸார் கைது செய்... மேலும் பார்க்க

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: நிவாரணம் அறிவிப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விர... மேலும் பார்க்க

இளைஞர் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி

தமிழக வெற்றிக் கழகத்தை நாங்கள் ஒரு கட்சியாகவே எடுத்துக்கொள்ளவில்லை எனவும் திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த... மேலும் பார்க்க

காவல் துறை அத்துமீறல்..! சிவகங்கை இளைஞர் அஜித்தை தாக்கும் விடியோ வெளியீடு!

சிவகங்கையில் காவல் துறையினர் தாக்கியதில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாரை போலீஸார் கொடூரமாகத் தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை கா... மேலும் பார்க்க

விசாரணை என்ற பெயரில் கொலை! அடிப்பதற்காகவா காவல்துறை? - நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி

திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விச... மேலும் பார்க்க