செய்திகள் :

திருவள்ளூர்: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - உயிரைப் பறித்த ஒரு சவரன் நகை

post image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து நான்கு நாட்களே ஆன நிலையில் லோகேஸ்வரியிடம் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அதனால் லோகேஸ்வரி, மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில்தான் கடந்த 30-ம் தேதி கழிவறையில் லோகேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், லோகேஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லோகேஸ்வரி

`மாப்பிள்ளை வீட்டினர் கொடுமைப்படுத்திருக்கிறார்கள்’

இந்தச் சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல் நிலையத்தில் லோகேஸ்வரின் குடும்பத்தினர் புகாரளித்தனர். அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக லோகேஸ்வரியின் குடும்பத்தினர் கூறுகையில், ``திருமணத்தின்போது 10 சவரன் தங்க நகைகளை மாப்பிள்ளை வீட்டினர் வரதட்சணையாக கேட்டனர். அதற்கு 5 சவரன் தங்க நகைகளை மட்டுமே கொடுக்க முடியும் என நாங்கள் தெரிவித்தோம். இதையடுத்து திருமணத்துக்கு மாப்பிள்ளை குடும்பத்தினர் சம்மதித்தனர். ஆனால் எங்களால் 4 சவரன் தங்க நகைகளை மட்டுமே லோகேஸ்வரிக்கு கொடுக்க முடிந்தது. ஒரு சவரன் தங்க நகையை கேட்டு லோகேஸ்வரியை மாப்பிள்ளை வீட்டினர் கொடுமைப்படுத்திருக்கிறார்கள்.

திருமணம் முடிந்து மறுவீட்டுக்காக தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி இந்த கொடூரங்களை எங்களிடம் தெரிவித்து கதறி அழுதார். அதோடு திருமணத்துக்குப்பிறகு லோகேஸ்வரியை கொத்தடிமை போல வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்ய கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் வீட்டில் உள்ள சோபாவில அமர கூடாது எனவும் கூறியிருக்கிறார்கள். அதனால் மனமுடைந்த லோகேஸ்வரி, வீட்டின் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக கழிவறையில் கதவு திறக்கப்படாததால் சந்தேகப்பட்டு கழிவறையின் கதவை உடைத்தபோதுதான் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரியவந்திருக்கிறது. எனவே லோகேஸ்வரியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீஸாரிடம் கேட்டபோது, ``திருமணமான 4-வது நாளில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் லோகேஸ்வரி தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறோம். அந்த ரிப்போர்ட் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`திருட்டு நகையை பறிமுதல் செய்வதாக அச்சுறுத்தி போலீஸார் கொள்ளையடிக்கின்றனர்'- நகை வியாபாரிகள் குமுறல்

தஞ்சாவூர், தென் கீழ் அலங்கம், பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவர் சரவணன். இவர் திருட்டு நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறி கடந்த ஜூன் 24ம் தேதி விசாரணைக்கு வந்த பெரம்லுார் போலீஸார் சரவணனை வேனில் அழைத்து சென... மேலும் பார்க்க

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோ... மேலும் பார்க்க

`குண்டு வச்சிருக்கோம்..’ - தென்காசி முகவரியில் இருந்து வேலூர் ஆட்சியருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இருக்கிறது. அருகிலேயே எஸ்.பி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில், `பெறுநர் - ஆட்சியர்’ எனக் குறிப்பிட்டு, `விடுநர் - ... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி-யை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? - உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதில் மர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் மாணவி நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் - மத்திய பிரதேச கொடூரம்

மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள நர்சிங்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் ... மேலும் பார்க்க

`எனக்கு பற்களில்தான் பிரச்னை’ - சிகிச்சைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய டாக்டர்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பல் டாக்டர் மணிகண்டன் ( 29). இவர், பூக்கடை சத்திரம் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கு கடந்த சில தினங்களுக்... மேலும் பார்க்க