செய்திகள் :

சிவகங்கை எஸ்.பி-யை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? - உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதில் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்புவனத்தில் போலீசுக்கு எதிராக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்த, அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, 5 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மானாமதுரை டி.எஸ்.பி-யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துக்கு நீதி கேட்டு பல தரப்பிலும் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான அறிக்கைக்குப்பின் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

"காவல்துறையின் உயரதிகாரிகள் அனுமதியின்றி தனிப்படையினர் இரண்டு நாட்களாக அஜித்குமாரை விசாரித்திருக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் சிவகங்கை எஸ்.பி உள்ளிட்ட உயரதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சாதாரண மனிதர்களும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் பெறுவதற்கு வழிவகைகள் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது விசாரணைக்கு சென்ற நபர் இறக்கும்படியாக தாக்கியது ஏன்? காவல்துறையினருக்கு இவ்வளவு அதிகாரத்தை வழங்கியது யார்? மாஜிஸ்திரேட்டுக்கு ஏன் உடனடியாக பிரேதப்பரிசோதனை அறிக்கை அனுப்பப்படவில்லை? காவல்துறை, நீதித்துறையினரின் குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? மாஜிஸ்திரேட் அப்பகுதி மக்களை விசாரிக்க ஏன் அனுமதிக்கப்படவில்லை? விசாரணை என்ற பெயரில் ஏழைகளை தாக்குவதற்குதான் காவல்துறையினர் உள்ளார்களா? பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழஙகுவதுதான் அவர்களின் கடமை. அப்படியிருக்கும்போது அவர்களின் கடமையை மறந்து இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது" என்றனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணை மதியத்துக்கு பின்பும் தொடர்ந்து நடந்தது.

`திருட்டு நகையை பறிமுதல் செய்வதாக அச்சுறுத்தி போலீஸார் கொள்ளையடிக்கின்றனர்'- நகை வியாபாரிகள் குமுறல்

தஞ்சாவூர், தென் கீழ் அலங்கம், பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவர் சரவணன். இவர் திருட்டு நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறி கடந்த ஜூன் 24ம் தேதி விசாரணைக்கு வந்த பெரம்லுார் போலீஸார் சரவணனை வேனில் அழைத்து சென... மேலும் பார்க்க

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோ... மேலும் பார்க்க

`குண்டு வச்சிருக்கோம்..’ - தென்காசி முகவரியில் இருந்து வேலூர் ஆட்சியருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இருக்கிறது. அருகிலேயே எஸ்.பி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில், `பெறுநர் - ஆட்சியர்’ எனக் குறிப்பிட்டு, `விடுநர் - ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் மாணவி நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் - மத்திய பிரதேச கொடூரம்

மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள நர்சிங்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - உயிரைப் பறித்த ஒரு சவரன் நகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி தி... மேலும் பார்க்க

`எனக்கு பற்களில்தான் பிரச்னை’ - சிகிச்சைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய டாக்டர்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பல் டாக்டர் மணிகண்டன் ( 29). இவர், பூக்கடை சத்திரம் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கு கடந்த சில தினங்களுக்... மேலும் பார்க்க