செய்திகள் :

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவிக்காத இந்திய அணி!

post image

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்னும் அதன் பிளேயிங் லெவனை அறிவிக்கவில்லை. முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் குறித்து ஷுப்மன் கில்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஷுப்மன் கில் பேசியதாவது: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படுவதற்கான தெரிவில் ஜஸ்பிரித் பும்ரா கண்டிப்பாக இருக்கிறார். 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் விதமான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய வேண்டும். அதிக ரன்கள் குவிக்கவும் வேண்டும்.

நாளை (ஜூலை 2) எந்த மாதிரியான அணியுடன் களமிறங்கவுள்ளோம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்தே பிளேயிங் லெவனை தேர்வு செய்வோம். கூடுதல் பேட்டருடன் களமிறங்குவதைக் காட்டிலும், 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் விதமான பிளேயிங் லெவனுடன் களமிறங்க வேண்டும் என்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The Indian team is yet to announce its playing eleven for the second Test against England.

இதையும் படிக்க: சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?

23 ஆண்டுகால சாதனை முறியடிப்பு: ஜேக் காலிஸுக்குப் பிறகு முதல் தெ.ஆ. வீரர்!

தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஸ்ச் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே போட்டியில் சதம், 5 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை 328 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் ... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வீரர்கள் சிலர் விற்கப்பட்டு, புதிய வீரர்கள் வாங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இளம்... மேலும் பார்க்க

பும்ரா இல்லாதது இந்தியாவின் பிரச்னை; இங்கிலாந்தின் பிரச்னையல்ல: பென் ஸ்டோக்ஸ்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை ... மேலும் பார்க்க

பாரம்பரியமான பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் ஒப்படைத்த லயன்..! ஓய்வு பெறுகிறாரா?

ஆஸி. வீரர் நாதன் லயன் தனது அணிக்காக பாட்டு பாடும் ’ஆஸி. சாங் மாஸ்டர்’ எனும் பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் கைமாற்றியுள்ளார். ஆஸி. அணி டெஸ்ட் போட்டிகளில் வெல்லும்போதெல்லாம் ஒரு கிராமியப் பாடலைப் பாடுவது வழ... மேலும் பார்க்க

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவ... மேலும் பார்க்க