செய்திகள் :

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை 328 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் (ஜூலை 1) நிறைவடைந்தது.

குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 418 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணிக்கு 537 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக வெலிங்டன் மசகட்ஸா 57 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் கிரைக் எர்வின் 49 ரன்களும், பிளெஸ்ஸிங் முஸராபானி 32 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஸ்ச் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கோடி யூசஃப் 3 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் லுஹான் பிரிட்டோரியஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

South Africa won the first Test against Zimbabwe by a massive margin of 328 runs.

இதையும் படிக்க: சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவிக்காத இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்கு... மேலும் பார்க்க

23 ஆண்டுகால சாதனை முறியடிப்பு: ஜேக் காலிஸுக்குப் பிறகு முதல் தெ.ஆ. வீரர்!

தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஸ்ச் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே போட்டியில் சதம், 5 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வீரர்கள் சிலர் விற்கப்பட்டு, புதிய வீரர்கள் வாங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இளம்... மேலும் பார்க்க

பும்ரா இல்லாதது இந்தியாவின் பிரச்னை; இங்கிலாந்தின் பிரச்னையல்ல: பென் ஸ்டோக்ஸ்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை ... மேலும் பார்க்க

பாரம்பரியமான பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் ஒப்படைத்த லயன்..! ஓய்வு பெறுகிறாரா?

ஆஸி. வீரர் நாதன் லயன் தனது அணிக்காக பாட்டு பாடும் ’ஆஸி. சாங் மாஸ்டர்’ எனும் பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் கைமாற்றியுள்ளார். ஆஸி. அணி டெஸ்ட் போட்டிகளில் வெல்லும்போதெல்லாம் ஒரு கிராமியப் பாடலைப் பாடுவது வழ... மேலும் பார்க்க

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவ... மேலும் பார்க்க