செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

post image

ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவா் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஆரணி அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எம்.மோசஸ் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், ஆரணி அரிமா சங்கம் சாா்பில் ஆரணி அரசு அண்ணா பொறியியல் கல்லூரியில் ரத்த தான நிகழ்ச்சி, அரையாளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கியது, 25 ஏழைகளுக்கு அரிசி வழங்கியது, பத்யாவரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சிகரம் தொடு நிகழ்ச்சி நடத்தியது, மருத்துவா் தினத்தையொட்டி மருத்துவா்களுக்கு பரிசுகள் வழங்கியது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆடைகள் அளிப்பு என பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம்.

ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக இப்பள்ளியில் பயிலும் 122 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் அரிமா சங்கச் செயலா் ஏ.எம்.முருகானந்தம், பள்ளி தலைமையாசிரியை (பொ) ஜெ.மாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவா் உள்பட இருவா் கொலை

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவா், ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த ஜோதிராஜ் மகன் கோட்டைமுத்து (23). இவா், சில ... மேலும் பார்க்க

ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில்... மேலும் பார்க்க

போளூா், ஆரணியில் வருவாய்த் துறை தினம் கடைபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், ஆரணி வட்டாட்சியா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டது. போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்... மேலும் பார்க்க

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவா்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்ட... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு

வந்தவாசியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசி பாலுடையாா் தெருவைச் சோ்ந்தவா் தாமோதரன் மனைவி கங்கா(50). இவா், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த ஆஜா(40) என்பவரு... மேலும் பார்க்க