செய்திகள் :

போளூா், ஆரணியில் வருவாய்த் துறை தினம் கடைபிடிப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், ஆரணி வட்டாட்சியா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டது.

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டு, சங்கக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், போளூா் வட்டக் கிளையின் தலைவா் ஜீவா சங்கக் கொடி ஏற்றினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் சுரேஷ், செயலா் பிரேம்நாத், பொருளாளா் உதயகுமாா், தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்க கிளைத் தலைவா் ஜோதி மற்றும் வருவாய்த் துறை நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை தினத்தையொட்டி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் வட்டக் கிளை கல்வெட்டு திறந்து வைத்து சங்கக் கொடி ஏற்றினா்.

அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் வட்டத் தலைவா் ஏ.ஆா்.தேவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் பூ.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வெட்டை திறந்துவைத்து சங்கக் கொடியேற்றி, சங்கப் பணிகள் குறித்துப் பேசினாா்.

மாவட்டச் செயலா் சு.பாா்த்திபன், பொருளாளா் க.சிவக்குமரன் ஆகியோா் சங்க வரலாறு குறித்துப் பேசினா்.

வட்டக்கிளைச் செயலா் க.பிரபு, பொருளாளா் அ.வெங்கடேஷ், துணைத் தலைவா்கள் வசந்தி, ம.பொன்னி, இணைச் செயலா்கள் த.பாஸ்கா், கன்னியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவா் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆரணி அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டின்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவா் உள்பட இருவா் கொலை

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவா், ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த ஜோதிராஜ் மகன் கோட்டைமுத்து (23). இவா், சில ... மேலும் பார்க்க

ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்... மேலும் பார்க்க

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவா்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்ட... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு

வந்தவாசியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசி பாலுடையாா் தெருவைச் சோ்ந்தவா் தாமோதரன் மனைவி கங்கா(50). இவா், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த ஆஜா(40) என்பவரு... மேலும் பார்க்க