செய்திகள் :

ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் வெய்யில்! சிவப்பு எச்சரிக்கை! ஈஃபிள் கோபுரம் மூடல்

post image

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வரும் நாள்களில் கடுமையாகும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரான்ஸ் முதல் சுவிஸ் வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை காரணமாக, ஈஃபிள் கோபுரத்தின் உச்சிப் பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி வரும் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுளள்து. பாரிஸில் அதிகபட்சமாக 41 டிகிரி (105.8 ஃபாரன்ஹீட்) செல்சியஸ் வெப்பம் செவ்வாயன்று பதிவாகியிருந்தது.

கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளை கடுமையான வெப்பம் வாட்டி வரும் நிலையில் வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் முதல் சுவிஸ் ஆல்ப்ஸ் வரை வெப்பஅலை அதிகரிக்கும் என்றும், மக்கள் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போர்த்துக்கலில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் எவேராவில் 46.6 டிகிரி வரை வெப்பம் பதிவாகியிருந்தது.

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் கடந்த ஜூன் மாதம் முந்தைய 100 ஆண்டுகள் காணாத அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த மாதம் சராசரி வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாக இருந்ததாகவும், இது கடந்த 1914-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அதிகபட்ச வெப்பநிலை என்றும் ஸ்பெயின் வானிலை சேவை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

இந்த கோடைக் காலத்தின் மிகப்பெரிய வெப்ப அலையை ஐரோப்பிய பிராந்தியம் எதிா்நோக்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெப்ப அலை காரணமாக க்ரீஸ், பிரான்ஸ், போர்த்துக்கல், துருக்கியில் காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலை... மேலும் பார்க்க

‘அடுத்த தலாய் லாமா தோ்ந்தெடுக்கப்படுவாா்’ -தலாய் லாமா உறுதி

‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என்று 14-ஆவது தலாய் லாமா புதன்கிழமை கூறினாா். திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக்... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு சில ஆயுதங்களின் விநியோகம் நிறுத்தம் - அமெரிக்கா

உக்ரைனுக்கு சில ஆயுதங்கள் விநியோகிப்பதை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முந்தைய ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் உக்ரைனுக்கு இந்த ஆயுதங்களை அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், அமெரி... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்!

காஸா போா் நிறுத்தத்துக்குத் தேவையான நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது குறித்து ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

எகிப்து: கப்பல் கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு

எகிப்தின் சூயஸ் வளைகுடாவில் எண்ணெய் துரப்பண கப்பல் கவிழ்ந்ததில் 4 போ் உயிரிழந்ததனா்; 4 போ் மாயமாகினா். ராஸ் கரேப் நகருக்கு அருகே கவிழ்ந்த இந்தக் கப்பலில் 30 தொழிலாளா்கள் இருந்ததாகவும், 22 போ் மீட்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் வேகமெடுக்கும் போலியோ பரவல்! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில், 2025-ம் ஆண்டில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் வெவ்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று தொடர்ந்து பரவி வருகின்... மேலும் பார்க்க