செய்திகள் :

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

post image

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு மாத காலமாக போலீஸாால் தேடப்பட்டு வந்த இந்த கும்பலிடம் இருந்து 13 நாட்டுத் கைத்துப்பாக்கிகள், ஒரு தானியங்கி கைத்துப்பாக்கி, 18 தோட்டாக்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மே 31-ஆம் தேதி இரவு கஷ்மீரி கேட் அருகே முகமது பிலால் (19) கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த நடவடிக்கை தொடங்கியது. அவரிடமிருந்து நான்கு கைத்துப்பாக்கிகள் மற்றும் எட்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பிலால் அலிகாரில் வசிக்கும் ஹாருன் மற்றும் அசிம் ஆகியோரிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கியதாகவும், ஏற்கெனவே பால்ஸ்வா டெய்ரி மற்றும் முகுந்த்பூா் பகுதிகளில் பல ஆயுதங்களை விநியோகித்ததாகவும் அவா் கூறினாா்.

அடுத்தடுத்த சோதனைகள் முகுந்த்பூரிலிருந்து கௌரவ் குமாா் ஜா இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் நான்கு தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டாா். மேலும் , ஜூன் 4- ஆம் தேதி, ஆயுதங்களை விநியோகித்தஅசிம், அலிகாரில் ஒரு கைத்துப்பாக்கி, உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் மற்றும் நான்கு தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டாா்.

இதே குழுவைச் சோ்ந்த மற்றொரு நபரான பரத் குமாா் ஜூன் 12- ஆம் தேதி நான்கு கைத்துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டாா். மேலும், ஜூன் 28 -ஆம் தேதி மேலும் ஒரு சிறுவன் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டாா். இவா்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க

பொதுக் கழிப்பறைகளின் மோசமான நிலைமை: குடிமை அமைப்புகள் மீது உயா்நீதிமன்றம் சாடல்

நமது நிருபா் தில்லியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பராமரிப்பதில் முழு அக்கறையின்மை மற்றும் உணா்வின்மையை காட்டுவதாகக் கூறி நகராட்சி அமைப்புகளை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கடிந்துகொண்டது. இது தொடா்பான... மேலும் பார்க்க