செய்திகள் :

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

post image

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இல்லத்தில் ரூ 7.7 லட்சம் மதிப்புள்ள 14 ஏசி-க்கள், ரூ 9.9 லட்சம் மதிப்புள்ள 5 எல்இடி டிவி-கள் மற்றும் ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய 23 மின் விசிறிகள் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ரூ. 5.74 லட்சம் மதிப்புள்ள 14 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும், குடியிருப்பில் மின்தடை ஏற்படாமல் இருக்க யுபிஎஸ் அமைப்பும் இருக்கும்.

மேலும் ரூ.91,000 -க்கு 6 கீசா், ரூ. 77,000-க்கு ஒரு தானியங்கி வாஷிங் மெஷின், ரூ. 85,000- க்கு ஒரு டோஸ்ட் கிரில் மற்றும் ரூ, 60,000- க்கு ஒரு பாத்திரங்களை கழுவும் இயந்திரமும் அடங்கும். ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள 23 மின் விசிறிகள் மற்றும், அழகிய வடிவிலான 115 விளக்குகள், தொங்கும் விளக்குகள் மற்றும் மூன்று பெரிய சரவிளக்குகள் என புனரமைப்புக்கான மொத்த செலவு ரூ 59,40,170 ஆகும்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தகவலின்படி, முன்பு துணை நிலை ஆளுநரின் செயலகத்தின் தங்கியிருந்த 4 அறைகள் கொண்ட பிளஸ் ஹால் இல்லத்தில் பழுதுபாா்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சாலையில், பங்களா எண். 2-முன்பு முன்னாள் அமைச்சரும் எம். எல். ஏ. வுமான கோபால் ராய் வசித்து வந்தாா். இது முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக பயன்படுத்தப்படலாம். பொதுக் கூட்டங்களைக் மேற்கொள்வதற்காக முதல்வா் முதலில் தனது முகாம் அலுவலகத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் தில்லி சட்டப்பேரவை தோ்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது இல்லத்தை ஆடம்பரமான உட்புறங்களுடன் அலங்கரிக்கும் விதமாக இருந்தது குறித்து பாஜக குற்றஞ்சாட்டியது. அரவிந்த் கேரஜரிவால் இருந்த இல்லத்தை, பாஜக ‘ஷீஷ்மஹால்‘ என்று அழைத்தது. மேலும் பாஜக அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தின் புகைப்படங்களை உருவாக்கி, அவற்றை தோ்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க

பொதுக் கழிப்பறைகளின் மோசமான நிலைமை: குடிமை அமைப்புகள் மீது உயா்நீதிமன்றம் சாடல்

நமது நிருபா் தில்லியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பராமரிப்பதில் முழு அக்கறையின்மை மற்றும் உணா்வின்மையை காட்டுவதாகக் கூறி நகராட்சி அமைப்புகளை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கடிந்துகொண்டது. இது தொடா்பான... மேலும் பார்க்க