140 கோடி மக்களில் ஒருவராக... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில், திருமணமான 45 நாள்களில், தனது மாமாவுடனான தவறான உறவை கைவிட முடியாமல், கணவரைக் கொலை செய்திருக்கிறார் குஞ்ஜா சிங். ஜூன் 24ஆம் தேதி, நபிநகர் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த 24 வயது பிரியன்ஷு குமார் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், இது கூலிப்படையினரின் வேலையாக இருக்கலாம், தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால், தீவிர விசாரணையில், பிரியன்ஷுவின் சொந்த மனைவியே இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.