செய்திகள் :

உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!

post image

காஸாவில் நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில், உணவுக்காக காத்திருந்த 45 பேர் உள்பட 94 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காஸா பகுதியில் இன்று (ஜூலை 3) இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ரகசிய மனிதாபிமான அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கொல்லப்பட்டனர்.

இத்துடன், நிவாரணப் பொருள்கள் வாங்குவதற்காக காத்திருந்த பால்ஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த, முவாஸி மண்டலத்திலுள்ள முகாம்களின் மீது நேற்று (ஜூலை 2) நள்ளிரவு முதல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 49 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் இன்று (ஜூலை 3) காலை வரை தொடர்ந்த நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரையில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையில் நடைபெற்று வரும் தாக்குதல்களில் 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Israel attacks Palestinians waiting for food! 94 killed!

இதையும் படிக்க: ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா?

உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற... மேலும் பார்க்க

சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் செலவுக் குறைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு! ஆனால் இந்தியாவுக்கு பயன்!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செலவு மசோதாவால் பல்வேறு நாட்டினர் பயன்பெறவுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு அறிமுகப்படுத்திய மசோதாவால் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடை... மேலும் பார்க்க

நைல் நதியின் மீதான சர்ச்சை அணையின் கட்டுமானம் நிறைவு! எத்தியோப்பியா அறிவிப்பு!

எகிப்து அரசின் எதிர்ப்பை மீறி நைல் நதியின் மீதான சர்ச்சைக்குரிய நீர்மின் அணையைக் கட்டிமுடித்துள்ளதாக, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார். எத்தியோப்பியா நாட்டில் நைல் நதியின் மீது, மின்சார... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: உதவாத சீன ஆயுதங்களால் அமெரிக்காவிடம் தஞ்சம் புகும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் விமானப் படையை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விவாதித்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பெரிதும் த... மேலும் பார்க்க

யேமன்: ஹவுதிகளின் தாக்குதலில் ஒருவர் பலி! 14 பேர் படுகாயம்!

யேமன் நாட்டின் தையிஸ் மாகாணத்திலுள்ள எரிபொருள் நிலையத்தின் மீதான ஹவுதிகளின் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென்மேற்கு மாகாணமான தையிஸில், கதாசி எரிபொருள் நிலைய... மேலும் பார்க்க