செய்திகள் :

நைல் நதியின் மீதான சர்ச்சை அணையின் கட்டுமானம் நிறைவு! எத்தியோப்பியா அறிவிப்பு!

post image

எகிப்து அரசின் எதிர்ப்பை மீறி நைல் நதியின் மீதான சர்ச்சைக்குரிய நீர்மின் அணையைக் கட்டிமுடித்துள்ளதாக, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார்.

எத்தியோப்பியா நாட்டில் நைல் நதியின் மீது, மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதியுடன் கூடிய அணையைக் கட்ட அந்நாட்டு அரசு நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்தது.

”கிராண்ட் எத்தியோப்பியன் ரெனைசான்ஸ் டேம்” என்று அழைக்கப்படும் அந்த அணையால் தங்களுக்கு வழங்கப்படும் நீர்பகிர்வானது பாதிக்கப்படும் எனக் கூறி, எகிப்து அரசு அதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது.

இந்நிலையில், தங்களது நாட்டின் வளர்ச்சியாகக் கருதப்படும் அணையைக் கட்டுவதற்கு, மற்றொரு நாட்டின் அனுமதி தேவையில்லை எனக் கூறி, நைல் நதியின் மீது அணைக் கட்டும் பணிகளை கடந்த 2011-ம் ஆண்டு எத்தியோப்பியா அரசு தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா நடைபெறும் எனவும், எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார்.

சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும், இந்த அணையை மைப்படுத்தி எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய இருநாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

முன்னதாக, சூடான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இந்தப் புதிய நீர்மின் அணையின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6,000 மெகாவாட்ஸ் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Ethiopian Prime Minister Abiy Ahmed has announced the completion of a controversial dam on the Nile River, despite opposition from the Egyptian government.

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவார... மேலும் பார்க்க

இந்தோனேசியா: படகு விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 28 போ் மாயம்

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 30 போ் கடலில் மாயமாகியுள்ளனா். இது குறித்து என்று மீட்புக் குழு அத... மேலும் பார்க்க

உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற... மேலும் பார்க்க

சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் செலவுக் குறைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு! ஆனால் இந்தியாவுக்கு பயன்!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செலவு மசோதாவால் பல்வேறு நாட்டினர் பயன்பெறவுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு அறிமுகப்படுத்திய மசோதாவால் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: உதவாத சீன ஆயுதங்களால் அமெரிக்காவிடம் தஞ்சம் புகும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் விமானப் படையை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விவாதித்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பெரிதும் த... மேலும் பார்க்க