செய்திகள் :

உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!

post image

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற்கு குர்ஸ்க் மாகாணத்தில், ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் மிகைல் குட்கோவ், ”போர் வேலைகளின்போது” கொல்லப்பட்டதாக, ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த, தெளிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், முன்னணியிலுள்ள தனது படைகளைச் சந்தித்தபோது ஜெனரல் குட்கோவ் கொல்லப்பட்டார், என குர்ஸ்க் மாகாணத்தின் ஆளுநர் அலெக்ஸாண்டர் கின்ஷ்டெயின் கூறியுள்ளார்.

ரஷிய கூட்டமைப்பின் நாயகன் என்ற மிக உயர்ந்த பட்டங்களைப் பெற்ற குட்கோவ், 115வது கடற்படைப் பிரிவின் தளபதியாகப் பணியாற்றி வந்தார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் அவர் ரஷிய கடற்படையின் துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் போரில், ரஷிய ராணுவத்தின் 10 தளபதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The deputy chief of Russia's navy has been reported killed in the Kursk region of Russia, which borders Ukraine.

இதையும் படிக்க: சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

‘ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங... மேலும் பார்க்க

இராக்: ஆயுதங்களை ஒப்படைக்கும் குா்து கிளா்ச்சியாளா்கள்

துருக்கி அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே), வடக்கு இராக்கில் தங்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் க்யுஷு பிராந்தியத்தின் அகுசெகி தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இதில் அந்தத் தீவு குலுங்க... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவார... மேலும் பார்க்க

இந்தோனேசியா: படகு விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 28 போ் மாயம்

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 30 போ் கடலில் மாயமாகியுள்ளனா். இது குறித்து என்று மீட்புக் குழு அத... மேலும் பார்க்க

சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உ... மேலும் பார்க்க