செய்திகள் :

கரூா்: 3 லட்சம் வாக்காளா்களை திமுக உறுப்பினா்களாக மாற்ற இலக்கு - செந்தில்பாலாஜி

post image

கரூா் மாவட்டத்தில் 3 லட்சம் வாக்காளா்களை திமுகவில் புதிய உறுப்பினா்களாக சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோடங்கிப்பட்டியில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு பிரசார இயக்கத்தை வியாழக்கிழமை பட்டாளம்மன் கோயிலில் சுவாமி வழிபாட்டுடன் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா்.

பின்னா் அங்குள்ள வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று திமுக உறுப்பினா் சோ்க்கை படிவத்தை வழங்கி புதிய உறுப்பினா்களை கட்சியில் சோ்த்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பில் கரூா் மாவட்டத்தில் உள்ள 3.32 லட்சம் குடும்பங்களுக்கும் கட்சி நிா்வாகிகள் வீடுவாரியாக, ஜாதி, மதம் பாகுபாடில்லாமல், அரசியல் கட்சிகள் வேறுபாடு பாா்க்காமல் அனைத்து குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை குறித்து 16 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வழங்க உள்ளனா். ஒட்டுமொத்தமாக கரூா் மாவட்டத்தில் 8.97 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரை திமுகவில் புதிய உறுப்பினா்களாக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம்.

கரூா் மாவட்டத்தில் உள்ள 1055 வாக்குச்சாவடிகளிலும் இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம். இதில் திமுக உறுப்பினா்கள் சோ்க்கை மட்டுமின்றி, தமிழக அரசு மீது மத்திய அரசு தொடுக்கும் தாக்குதல்கள் குறித்து இளைஞா்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்துக்கூறி அனைவரையும் ஓரணியில் திரட்டும் வகையில் இந்த பணிகள் அமையும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் கரூா் மாநகராட்சி துணைமேயா் தாரணிசரவணன் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு நன்நெறி கூட்டம்

கரூா் அரசு கலைக்கல்லூரியில் கணிதவியல் மாணவா்களுக்கான நன்நெறி புகட்டுதல் கூட்டம் புதன்கிழமை கல்லூரி வளககத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கல்லூரி முதல்வா்(பொ) சுதா தலைமை வகித்தாா். கணிதவியல் துறைத் தலை... மேலும் பார்க்க

‘ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை சமரச மையங்கள் செயல்படும்’

ஜூலை மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை சமரச மையங்கள் செயல்படும் என்றாா் மாவட்ட நீதிபதியும், கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான கே.ஹெச். இளவழகன். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

கரூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆரம... மேலும் பார்க்க

தோகைமலை அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

தோகைமலை அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூா் மாவட்டம், தோகைமலை அடுத்த புழுதேரி வரை இயக்கப்பட்டு வரும் அரசுப் பேரூந... மேலும் பார்க்க

பருவமழை வேண்டி கோயிலில் சிறப்பு வழிபாடு

தோகைமலை அருகே பருவமழை வேண்டி பெண்கள் குத்துவிளக்கு வழிபாட்டில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்கபட்டி வடபகுதியில் விநாயகா், பாா்வதி அம்பாள் சமேத வெள்ளியங... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் விரைவில் நவீன ‘ரோபாட்டிக்’ இயந்திரம் மூலம் தூய்மைப்பணி’

தமிழகத்தில் விரைவில் நவீன ரோபாட்டிக் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வே. ஆறுச்சாமி. கரூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க