செய்திகள் :

‘தமிழகத்தில் விரைவில் நவீன ‘ரோபாட்டிக்’ இயந்திரம் மூலம் தூய்மைப்பணி’

post image

தமிழகத்தில் விரைவில் நவீன ரோபாட்டிக் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வே. ஆறுச்சாமி.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத்தின் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.இளங்கோ(அரவக்குறிச்சி), க. சிவகாம சுந்தரி(கிருஷ்ணராயபுரம்)ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வே. ஆறுச்சாமி பேசுகையில், தூய்மைப் பணியாளா்களின் நல வாரியத்துக்கு தமிழக முதல்வா் ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா். இதன்மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு திருமண உதவித் தொகை, விபத்து காப்பீட்டு திட்ட உதவித் தொகை, இயற்கை மரண உதவி மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்கள் கழிவு நீரை அகற்றும் போது விஷ வாயு தாக்கி உயிரிழக்கின்றனா். இதற்காக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீா் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக அதிநவீன ரோபாட்டிக் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளாா். தூய்மைப் பணியாளா்கள் எக்காரணத்தைக் கொண்டும் மலக்குழியில் இறங்கி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடக் கூடாது என்றாா் அவா்.

தொடா்ந்து தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தின் சாா்பாக 100 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகளும், விபத்து காப்பீட்டு உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையாக 1 பயனாளிக்கு ரூ. 5.05 லட்சம் உள்பட பல்வேறு திட்டத்தில் மொத்தம் 107 பயனாளிகளுக்கு ரூ. 5.70 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரிய துணைத் தலைவா் செ. கனிமொழிபத்மநாபன், மேயா் வெ. கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) சீ. முருகவேல், மண்டலக்குழு தலைவா்கள் எஸ். பி. கனகராஜ், ஆா். எஸ். ராஜா, நல வாரிய உறுப்பினா் செ. ரமேஷ், மாமன்ற உறுப்பினா் வேலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீவலம்புரி சித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கரூா் வாங்கப்பாளையம் ஸ்ரீ வலம்புரி சித்திவிநாயகா் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் வாங்கப்பாளையம் எம்.கே. நகரில் உள்ள ஸ்ரீவலம்புரி சித்திவிநாய... மேலும் பார்க்க

கரூரில் அரசு சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவா்களுக்கு சீா்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சாா்பில் சென்னையில் புதன்க... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலி... மேலும் பார்க்க

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூரில் ஓரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினா் சோ்க்கும் முன்னெடுப்பு பிரசா... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைவு

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது அரவக்குறிச்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொதுமக்கள் மற்றும் கல்வியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ... மேலும் பார்க்க

திருக்குறளை விரைவாக கூறிய இரு சிறுமிகளுக்கு பாராட்டு

தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதுவது, திருக்குறளை விரைந்து கூறிய இரு சிறுமிகளை கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை பாராட்டினாா். கரூா் தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ம.ஜெயமகதி... மேலும் பார்க்க