செய்திகள் :

தொடர் உயர்வுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.72,840-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை ஜூலை மாதம் தொடக்கம் முதலே உயா்ந்து வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை 1-இல் பவுனுக்கு ரூ.840 உயா்ந்து ரூ.72,160-க்கும், ஜூலை 2-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.72,520-க்கும் விற்பனையான நிலையில், தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை(ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.72,840-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, வெள்ளிக்கிழமை(ஜூலை 4) அதிரடியாக பவுனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.

அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 குறைந்து ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15,004 கோடி யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு

The price of gold in Chennai fell by Rs. 440 per sovereign on Friday and is being sold at Rs. 72,400.

திருமண ஆசை காட்டி பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரம்: பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வழக்கில், இளைஞருக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருகை: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரிக்கு சொகுசு பயணிகள் கப்பல் வெள்ளிக்கிழமை வருவதை நிறுத்தக் கோரி துறைமுக அருகே அதிமுகவினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரிக்கு பயணிகள் சொகுசு கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே விஜயநகர ஆட்சி கால பாறை கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரை அருகே விஜயநகர ஆட்சி கால பாறை கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, திருவள்ள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டாா்.திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடம... மேலும் பார்க்க

முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

வேதாரண்யம்: துளசியாப்பட்டினத்தில் ஔவையார் மணிமண்டபம் ஒப்பந்ததாரரிடம் முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.நாகை மாவட... மேலும் பார்க்க

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்: செந்தில் பாலாஜி

கோவை: கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க