செய்திகள் :

முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

post image

வேதாரண்யம்: துளசியாப்பட்டினத்தில் ஔவையார் மணிமண்டபம் ஒப்பந்ததாரரிடம் முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் பெண்பாற் புலவர் ஔவையாருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த வளாகத்துக்குள் கட்டமைப்புப் பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படுவதாக பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பணி நடைபெறும் இடத்தை வேதாரண்யம் வட்டாட்சியர் வடிவழகன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் அதன் அருகே குவிக்கப்பட்டிருந்த மண்ணின் அளவை நில அளவைரைக் கொண்டு அளந்து ஆய்வு செய்தார்.

ஔவையாருக்கு மணிமண்டபம் அமைக்கும் இடத்தில் ஆய்வு செய்த வட்டாட்சியர்.

கட்டுமானப் பணிக்கு திட்ட அறிக்கை வழிகாட்டுதலின் பேரிலே பள்ளம் தோண்டப்பட்டு வருவதாகவும், அதிலிருந்து எடுக்கப்பட்ட மண் பக்கவாட்டில் வைத்திருந்து பணி முடிவின்போது தூர்வைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒப்பந்ததாரர் தரப்பில் வட்டாட்சியரிடம் விளக்கப்பட்டது.

மேலும், முருகன் மாநாட்டுக்கு ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் செய்தியாளர்கள் முன்பாகவே வட்டாட்சியரிடம் ஒப்பந்ததாரர் விளக்கம் அளித்ததோடு, பணம் கொடுக்காததால் பொய் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து வாய்மேடு காவல் நிலையத்தில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாஜக நிர்வாகிகளான கரு நாகராஜன், இளங்கோவன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதனிடையே, மறியல் போராட்டத்தை கைவிட்ட பாஜகவினர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து சென்றனர்.

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்: செந்தில் பாலாஜி

Police have arrested two BJP executives in connection with the incident of blackmailing the contractor of the Avaiyar Manimandapam in Tulsiyapatnam by demanding money for a Murugan conference.

திருமண ஆசை காட்டி பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரம்: பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வழக்கில், இளைஞருக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருகை: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரிக்கு சொகுசு பயணிகள் கப்பல் வெள்ளிக்கிழமை வருவதை நிறுத்தக் கோரி துறைமுக அருகே அதிமுகவினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரிக்கு பயணிகள் சொகுசு கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே விஜயநகர ஆட்சி கால பாறை கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரை அருகே விஜயநகர ஆட்சி கால பாறை கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, திருவள்ள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டாா்.திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடம... மேலும் பார்க்க

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்: செந்தில் பாலாஜி

கோவை: கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க

தொடர் உயர்வுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.72,840-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்... மேலும் பார்க்க