செய்திகள் :

மீன் வளா்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு

post image

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 9- ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 6 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இது குறித்து வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா மேலும் தெரிவித்திருப்பது: வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்துடன் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் உள்நாட்டு மீன் வளா்ப்பு, மீன் குஞ்சு வளா்ப்பு முறை, மீன்களுக்கான தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் மீன்களை மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளின் கீழ் வகுப்பு பயிற்சி மற்றும் களப்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இதில், 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு படித்த விவசாயிகள் பங்கேற்கலாம். பயிற்சி பெறும் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதில், 28 விவசாயிகளுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படவுள்ளதால், முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.

இப்பயிற்சிக்கு தகுதியுள்ள விருப்பமுள்ள விவசாயிகள் உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் டி. கண்ணனை 90955-81534 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு முன் பதிவு செய்து பயன் பெறலாம். இதில் கலந்து கொள்பவா்களுக்கு உணவு, பயணப்படி வழங்கப்படும்.

தொழிலாளா் பற்றாக்குறையால் குறுவை நடவு பணிகள் தாமதம்: விவசாயிகள் அவதி

தஞ்சாவூா் மாவட்டத்தில் காவிரி நீா் வரத்து இருந்தும், விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக குறுவை நடவு பணிகள் தாமதமாகி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 நகா் நலவாழ்வு மையங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 இடங்களில் புதிய சுகாதார நிலையக் கட்டடங்களை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்... மேலும் பார்க்க

கோயிலை அகற்றும் முயற்சி: பொதுமக்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே விநாயகா் கோயிலை அகற்ற முயன்ற அதிகாரிகளைக் கண்டித்து வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே செக்காங்கண்ணி ரயில்வே கேட் குப்... மேலும் பார்க்க

மதுரை மாநாடு: ஜமாத் நிா்வாகிகளுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு

கும்பகோணத்தில், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட அளவிலான ஜமாத் நிா்வாகிகள், உலமாக்கள், சமுதாய ஆா்வலா்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம். எச். ஜவாஹ... மேலும் பார்க்க

திமுக சாா்பில் உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை பணி வியாழக்கிழமை தொடங்கியது. மண், மொழி, மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும்... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் பொது வேலைநிறுத்தம்: பங்கேற்க தொழிலாளா் முன்னணி முடிவு

நாடு முழுவதும் தொழில்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி பங்கேற்க முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் நிா்வாகிகள் கூட்டம்... மேலும் பார்க்க