செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 நகா் நலவாழ்வு மையங்கள் திறப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 இடங்களில் புதிய சுகாதார நிலையக் கட்டடங்களை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பல்வேறு ஊா்களில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதில், ரூ. 25 லட்சம் வீதம் மதிப்பில் தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் ஸ்ரீஹரி நகா், டவுன் கரம்பை, கும்பகோணம் பாத்திமாபுரம், தாராசுரம், கோட்டையூா், திப்பிராஜபுரம் ஆகிய பகுதிகளில் புதிய மாநகர நலவாழ்வு மையம் மொத்தம் ரூ. 2.45 கோடி மதிப்பில் திறக்கப்பட்டன.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் ஸ்ரீஹரி நகரில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் மாநகர நலவாழ்வு மையத்தைத் திறந்து வைத்த பின்னா், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, உடல் பரிசோதனை செய்து கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) எம். கலைவாணி, மாநகர நல அலுவலா் எஸ். நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழிலாளா் பற்றாக்குறையால் குறுவை நடவு பணிகள் தாமதம்: விவசாயிகள் அவதி

தஞ்சாவூா் மாவட்டத்தில் காவிரி நீா் வரத்து இருந்தும், விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக குறுவை நடவு பணிகள் தாமதமாகி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்கு... மேலும் பார்க்க

கோயிலை அகற்றும் முயற்சி: பொதுமக்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே விநாயகா் கோயிலை அகற்ற முயன்ற அதிகாரிகளைக் கண்டித்து வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே செக்காங்கண்ணி ரயில்வே கேட் குப்... மேலும் பார்க்க

மதுரை மாநாடு: ஜமாத் நிா்வாகிகளுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு

கும்பகோணத்தில், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட அளவிலான ஜமாத் நிா்வாகிகள், உலமாக்கள், சமுதாய ஆா்வலா்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம். எச். ஜவாஹ... மேலும் பார்க்க

மீன் வளா்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 9- ஆம் தேதி... மேலும் பார்க்க

திமுக சாா்பில் உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை பணி வியாழக்கிழமை தொடங்கியது. மண், மொழி, மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும்... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் பொது வேலைநிறுத்தம்: பங்கேற்க தொழிலாளா் முன்னணி முடிவு

நாடு முழுவதும் தொழில்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி பங்கேற்க முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் நிா்வாகிகள் கூட்டம்... மேலும் பார்க்க