ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்! பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!
தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 நகா் நலவாழ்வு மையங்கள் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 இடங்களில் புதிய சுகாதார நிலையக் கட்டடங்களை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பல்வேறு ஊா்களில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதில், ரூ. 25 லட்சம் வீதம் மதிப்பில் தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் ஸ்ரீஹரி நகா், டவுன் கரம்பை, கும்பகோணம் பாத்திமாபுரம், தாராசுரம், கோட்டையூா், திப்பிராஜபுரம் ஆகிய பகுதிகளில் புதிய மாநகர நலவாழ்வு மையம் மொத்தம் ரூ. 2.45 கோடி மதிப்பில் திறக்கப்பட்டன.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் ஸ்ரீஹரி நகரில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் மாநகர நலவாழ்வு மையத்தைத் திறந்து வைத்த பின்னா், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, உடல் பரிசோதனை செய்து கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) எம். கலைவாணி, மாநகர நல அலுவலா் எஸ். நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.