செய்திகள் :

பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!

post image

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா ஏவிய பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற வெறும் 30 நொடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் ராணா சனாவுல்லா உள்ளூர் ஊடகத்துக்கு வியாழக்கிழமை பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது:

நூர் கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா பிரமோஸ் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியபோது, அதில் அணு ஆயுதம் உள்ளதா என்பதை பகுப்பாய்வு செய்ய பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெறும் 30 - 45 நொடிகளே இருந்தது.

30 நொடிகளில் பகுப்பாய்வு செய்து எதிர்வினையாற்றுவது என்பது மிகவும் ஆபத்தான சூழல். ஏனெனில், அணு ஆயுதப் போராக மாறியிருக்கும்.

அணு ஆயுதங்கள் பயன்படுத்தாததால் இந்தியா நல்லது செய்துள்ளது எனக் கூறவில்லை, எதிர் தரப்பினர் தவறாக புரிந்துகொண்டிருந்தால் அணு ஆயுதப் போரை தூண்டுவதற்கான முதல் ஆயும் ஏவப்பட்டிருக்கலாம்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பெரிதும் தவித்தது. மேலும், போரில் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய ஆயுதங்களையும் உபகரணங்களையும் மீறி, பாகிஸ்தானின் ராணுவ இலக்குகளை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கின.

பாகிஸ்தானின் பல்வேறு விமானப் படைத் தளங்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் ஓடுதளங்கள், கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

During the Operation Sindoor attack, Pakistan had just 30 seconds to react to the Brahmos missile launched by India, said Rana Sanaullah, advisor to the Prime Minister.

இதையும் படிக்க : அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரிக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்! இந்தியர்களுக்கு என்ன பயன்?

ஜம்மு-காஷ்மீருக்குப் பயமின்றி வருகை தரலாம்: பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

ஜம்மு-காஷ்மீரை பயமின்றி அனைவரும் வந்து பார்வையிடுமாறு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எல்லை ஒன்றுதான்; ஆனால், எதிரிகள் 3 பேர்!

சீனாவின் ஆயுதங்களை சோதிக்கும் இடமாகத்தான் பாகிஸ்தான் இருப்பதாக துணை ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்தார்.தில்லியில் நடைபெற்ற ராணுவத் துறையின் நிகழ்ச்சியில் துணை ராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ... மேலும் பார்க்க

கியூட்-யுஜி தேர்வு முடிவுகள் வெளியீடு

நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (கியூட்-யுஜி) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட்-யுஜி தேர்வை தேசயி தேர்வு முகமை நடத்தியிருந்த நி... மேலும் பார்க்க

படகிலிருந்த மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மார்லின் மீன்!

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 100 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட கருப்பு மார்லின் மீன் ஒன்று, அவரை இழுத்து கடலில் வீசிய சம்பவ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பெறும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கே: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்ற நாடுகள் வழங்கும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கானது என்று காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயண... மேலும் பார்க்க

நீதிபதியை பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன? முழு விவரம்!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கிறது.நாடாளுமன்றத்தில் இது தொடா்பான... மேலும் பார்க்க