செய்திகள் :

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரிக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்! இந்தியர்களுக்கு என்ன பயன்?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (செனட்) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீனங்கள் குறைப்பு, சட்டவிரோதமாகக் குடியேறுவதைத் தவிர்க்க 350 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.29.91 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்கள் நிறைந்த செலவுக் குறைப்பு மசோதா (ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் - One Big Beautiful Bill) அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.

ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் கிடைத்தன. வெறும் 4 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா அதிபர் டிரம்ப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கையெழுத்திடவுள்ளார்.

இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தியர்களுக்கு என்ன பயன்?

அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா மூலம், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடைவர்.

அமெரிக்காவில் உள்ள பிற நாட்டவா்கள் தங்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணத்துக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், அது ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புபவா் ரொக்கம், காசோலை போன்ற வழிமுறையில் அனுப்பும் தொகைக்கு அடுத்த ஆண்டு ஜன.1 முதல் இந்த வரி விதிப்பு பொருந்தும்.

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளவா்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அதிக அளவு பணம் அனுப்பியதில் இந்தியா்கள் முதலிடத்தில் இருந்தனா். அந்த ஆண்டு அவா்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை 137.7 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.11.77 லட்சம் கோடி). அதில் 38 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.24 லட்சம் கோடி) அமெரிக்காவில் உள்ள இந்தியா்கள் அனுப்பினா்.

One Big Beautiful Bill passed in US Senate.

இதையும் படிக்க : 500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

சர்வதேச மேம்பாட்டுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தியதால், உலகளவில் கோடிக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.அமெரிக்காவின் செலவுகளைக் குறைப்பதற்காக, சர்வதேச மேம்பாட்டு... மேலும் பார்க்க

ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!

ஜப்பானில் சுனாமி வரவிருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.புதிய பாபா வங்கா என்றழைக்கப்படும் ரியோ தட்சுகி என்பவர் 1999 ஆம் ஆண்டில் கணித்த சில கணிப்புகள் நிஜமாகவே நிகழ்ந்த நிலையில், அவரை தீ... மேலும் பார்க்க

500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

‘ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங... மேலும் பார்க்க

இராக்: ஆயுதங்களை ஒப்படைக்கும் குா்து கிளா்ச்சியாளா்கள்

துருக்கி அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே), வடக்கு இராக்கில் தங்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் க்யுஷு பிராந்தியத்தின் அகுசெகி தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இதில் அந்தத் தீவு குலுங்க... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவார... மேலும் பார்க்க