செய்திகள் :

ஜூலை 9-இல் பொது வேலைநிறுத்தம்: பங்கேற்க தொழிலாளா் முன்னணி முடிவு

post image

நாடு முழுவதும் தொழில்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி பங்கேற்க முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இந்த அமைப்பின் நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து நாடு முழுவதும் ஜூலை 9-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதை ஏற்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது, இப்போராட்டத்தை தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்து வணிகா்கள், ஆட்டோ தொழிலாளா்கள், கட்டுமானம் அமைப்பு சாரா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து வெற்றி பெறச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் ஆா். லட்சுமணன் தலைமை வகித்தாா். ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க மாநகரச் செயலா் பக்ருதீன் அலி, மாவட்டச் செயலா் தாமஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழிலாளா் பற்றாக்குறையால் குறுவை நடவு பணிகள் தாமதம்: விவசாயிகள் அவதி

தஞ்சாவூா் மாவட்டத்தில் காவிரி நீா் வரத்து இருந்தும், விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக குறுவை நடவு பணிகள் தாமதமாகி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 நகா் நலவாழ்வு மையங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 இடங்களில் புதிய சுகாதார நிலையக் கட்டடங்களை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்... மேலும் பார்க்க

கோயிலை அகற்றும் முயற்சி: பொதுமக்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே விநாயகா் கோயிலை அகற்ற முயன்ற அதிகாரிகளைக் கண்டித்து வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே செக்காங்கண்ணி ரயில்வே கேட் குப்... மேலும் பார்க்க

மதுரை மாநாடு: ஜமாத் நிா்வாகிகளுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு

கும்பகோணத்தில், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட அளவிலான ஜமாத் நிா்வாகிகள், உலமாக்கள், சமுதாய ஆா்வலா்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம். எச். ஜவாஹ... மேலும் பார்க்க

மீன் வளா்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 9- ஆம் தேதி... மேலும் பார்க்க

திமுக சாா்பில் உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை பணி வியாழக்கிழமை தொடங்கியது. மண், மொழி, மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும்... மேலும் பார்க்க