செய்திகள் :

`மீண்டும் வருவேன்' பார்சல் கொண்டுவந்த கூரியர்பாய்; தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்

post image

உணவு, தபால், பொருள்கள் என எதாவது ஒரு பொருளை டெலிவரி செய்ய டெலிவரிபாய்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவது இன்று வழக்கமாகிவிட்டது. புனே கொண்ட்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒருவர் கூரியர் டெலிவரி செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டு வந்தார். இதனால் செக்யூரிட்டி கார்டு எந்த கேள்வியும் கேட்காமல் கட்டடதிற்குள் அனுமதித்தனர்.

அந்த நபர் நேரடியாக 22 வயது பெண் வசிக்கும் வீட்டிற்கு சென்று கூரியர் வந்திருப்பதாக தெரிவித்தார். அப்பெண்ணிடம் ஒ.டி.பி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனெ அப்பெண் தனது போனை எடுக்க வீட்டிற்குள் சென்றார். அந்நேரம் கூரியர் கொண்டு வந்திருந்த நபர் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்குள் சென்று அப்பெண்ணின் முகத்தில் எதையோ ஸ்ப்ரே செய்துவிட்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.

அவர் அடித்த ஸ்ப்ரேயால் அப்பெண் மயக்கமாகிவிடார். பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அப்பெண்ணின் மொபைல் போனில் அப்பெண்ணுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்ட கூரியர் பாய் அதில், 'மீண்டும் வருவேன்' என்று எழுதி வைத்துவிட்டு சென்றார். வெளியில் சென்று இருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வீட்டிற்கு வந்த போது அவர் மயங்கி கிடந்தார். உடனே அவரை மயக்கம் தெளியவைத்து விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து துணை கமிஷனர் ராஜ்குமார் கூறுகையில், ''இரவு 7.30 மணிக்கு கூரியர் பாய் வந்துள்ளார். அவருக்கு ஒ.டி.பி கொடுக்க போனை எடுக்க பெண் வீட்டிற்குள் சென்றபோது கூரியர் பாய் வீட்டு கதவை பூட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் போனில் ஒரு செல்பி இருந்தது. அப்பெண்ணின் முகத்தில் எதையோ ஸ்ப்ரே செய்துள்ளார். இதனால் அப்பெண் மயக்கத்தில் இருந்தார்''என்றார். கூரியர் பாயின் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

``மேகாலயா சம்பவத்தை போல செய்தேன்..'' - திருமணமாகி 45 நாளில் கணவனை கொன்ற பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

மேகாலயாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவரை அவரது மனைவி தேனிலவுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவத்தை போன்று பீகாரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேகாலயா சம்பவத... மேலும் பார்க்க

சென்னை: காலையில் திருமணம் மாலையில் மாயம்; மணமகளைத் தேடும் குடும்பம்; என்ன நடந்தது?

சென்னை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகவள்ளி. இவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் 2.7.2025-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, "என் கணவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். என்னுடைய மகள் அர்ச்... மேலும் பார்க்க

ஈரோடு: ப்ளஸ் 2 மாணவர் அடித்துக் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது; நடந்தது என்ன?

ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரைச் சேர்ந்தவர் சிவா. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களுடைய மகன் ஆதித்யா (17), மகள் தர்ஷினி (13). ஆதித்யா குமலன்கு... மேலும் பார்க்க

`ரூ.5 லட்சம்' கொடுத்த பணத்தை கேட்டதற்காக வீட்டுக்கு தீ வைத்த உறவினர்.. பெங்களூருவில் நடந்த கொடுமை

பெங்களூரு விவேக் நகரில் இரு குடும்பத்தினர் இடையே பணம் சம்பந்தமான தகராறில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தகராறு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பிருந்... மேலும் பார்க்க

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி பின்னணி

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு Good touch, Bad touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அண்மையில... மேலும் பார்க்க