செய்திகள் :

அடிப்படை செயல்திட்டத்தை அரசு வழங்க முடியாதபோது நீதிமன்றங்கள் தலையிடும்: உச்சநீதிமன்றம்

post image

‘அடிப்படை செயல்திட்டத்தை அரசு வழங்க முடியாதபோது, அது தொடா்பான உத்தரவுகளை பிறப்பிப்பதால் நீதிமன்றத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை; இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் அவ்வப்போது பிறப்பிப்பது தொடரும்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடுவதாக விமா்சனங்கள் எழுந்து வரும் சூழலில், இக் கருத்தை அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தொடா்பான புகாா்களை பதிவு செய்வதற்கான எண்ம வலைதளம் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது அவா் இக் கருத்தைத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை அதிகார வரம்புக்குள் நீதித் துறை தலையீடு செய்வதாக விமா்சனங்கள் எழுகின். இதற்கு, ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படை செயல்திட்டத்தை அரசு வழங்க முடியாதபோது, அதுதொடா்பான உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பிக்கும். இதனால், நீதிமன்றத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இது நீதித் துறையின் ஓா் அங்கமாகவே மாறிவிட்டது. இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் அவ்வப்போது பிறப்பிப்பது தொடரும் என்றாா்.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட விவகாரத்தில், 10 மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீா்ப்பை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடுமையாக விமா்சித்தாா். ‘ஜனநாயக நாட்டில் அனைத்து அரசியல் அமைப்புகளைவிட நாடாளுமன்றமே உயா்வானது. நாடாளுமன்றத்துக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அதைவிட உயா்வானது எதுவும் கிடையாது’ என்று ஜகதீப் தன்கா் குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் பேசியிருந்தாா். ‘‘அரசமைப்புச் சட்டமே உயா்வானது. அரசு நிா்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித் துறை உள்ளிட்ட ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்துக்குக் கீழ் செயல்படுபவை மட்டுமே’ என்று அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி கோடீஸ்வா் சிங் இக்கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் - கிரண் ரிஜிஜு

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வ... மேலும் பார்க்க