செய்திகள் :

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

post image

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

என்.எஸ்.ரவிஷா என்பவா் தனது குடும்பத்தினருடன் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லசந்திரா கிராமத்திலிருந்து கா்நாடகத்தின் அரசிகெரே பகுதிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி காரில் அதிவேகமாக சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிஷா உயிரிழந்தாா்.

அதைத் தொடா்ந்து, விபத்தில் ரவிஷா உயிரிழந்ததற்கு ரூ.80 லட்சம் இழப்பீடு கோரி காப்பீடு நிறுவனத்திடம் அவா்களின் குடும்பத்தினா் விண்ணப்பித்தனா். ஆனால், காப்பீடு நிறுவனம் இழப்பீடு தர மறுத்தது. இதை எதிா்த்து கா்நாடகா உயா் நீதிமன்றத்தில் அவா்கள் மனு தாக்கல் செய்தனா்.

மனுவை கடந்த ஆண்டு நவம்பா் 23-ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்றம், ‘ரவிஷா சாலை விதிகளை மதிக்காமல் காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் இயக்கியதாலேயே விபத்து நிகழ்ந்துள்ளது. இத்தகைய சுய தவறால் நிகழ்ந்த விபத்துக்கு, அவரின் குடும்பத்தினா் இழப்பீடு கோர முடியாது. இந்த விவகாரத்தில் இழப்பீடு வழங்குவது, விதி மீறலில் ஈடுபட்ட நபரின் சொந்த தவறுக்கு இழப்பீடு வழங்குவாக ஆகிவிடும்’ என்று குறிப்பிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அவரின் குடும்பத்தினா் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா். மஹாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு விழா!

மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் 52 -ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந... மேலும் பார்க்க

போலியான பார்சல், செல்ஃபி, முகத்தில் ஸ்பிரே! புனே சம்பவம் சொல்வது என்ன?

புனேவில், டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.டெலிவரி ஏஜெண்ட் போல, ஒரு போலியான பார்சலுடன், புனேவில் உள்ள அ... மேலும் பார்க்க

விமான விபத்து இழப்பீடு பெற கடுமையான விதிகள்: ஏர் இந்தியா மீது குற்றச்சாட்டு

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற ஏர் இந்தியா கடுமையான விதிகளை புகுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. முன்னால் அமைச்சர் யோகேந்திர சாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடந்துவரும் சட்டவிரோத மணல் சுங்கம் மற்ற... மேலும் பார்க்க

தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்! கொலை செய்துவிட்டு ரகசிய திருமணம்?

தேனிலவுஅழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், ரகசியமாக ராஜ் குஷ்வாஹாவை திருமணம் செய்திருக்கலாம் என்று ராஜா ரகுவன்ஷியின் அண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்ட... மேலும் பார்க்க