செய்திகள் :

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

post image

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.

முன்னால் அமைச்சர் யோகேந்திர சாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடந்துவரும் சட்டவிரோத மணல் சுங்கம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ஹசாரிபாக் மற்றும் ராஞ்சி உள்பட எட்டு இடங்களில் அமலாத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோத மணல் சுரங்கம் மற்றும் நில அபகரிப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் வருமானம் ஈட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடந்துவரும் விசாரணையுடன் இந்த சோதனைகள் தொடர்புடையவையாகும்.

சாவ் ஒரு காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலத்தின் முன்னாள் விவசாய அமைச்சர். அவரது எம்.எல்.ஏ மகள் அம்பா பிரசாத் மீது விசாரிக்கப்பட்ட பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The Enforcement Directorate on Friday raided multiple locations in Jharkhand as part of an ongoing alleged illegal sand mining and extortion linked money laundering investigation against former minister Yogendra Sao and his family members, official sources said.

இந்தியாவுக்கு எல்லை ஒன்றுதான்; ஆனால், எதிரிகள் 3 பேர்!

சீனாவின் ஆயுதங்களை சோதிக்கும் இடமாகத்தான் பாகிஸ்தான் இருப்பதாக துணை ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்தார்.தில்லியில் நடைபெற்ற ராணுவத் துறையின் நிகழ்ச்சியில் துணை ராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ... மேலும் பார்க்க

கியூட்-யுஜி தேர்வு முடிவுகள் வெளியீடு

நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (கியூட்-யுஜி) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட்-யுஜி தேர்வை தேசயி தேர்வு முகமை நடத்தியிருந்த நி... மேலும் பார்க்க

படகிலிருந்த மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மார்லின் மீன்!

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 100 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட கருப்பு மார்லின் மீன் ஒன்று, அவரை இழுத்து கடலில் வீசிய சம்பவ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பெறும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கே: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்ற நாடுகள் வழங்கும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கானது என்று காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயண... மேலும் பார்க்க

நீதிபதியை பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன? முழு விவரம்!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கிறது.நாடாளுமன்றத்தில் இது தொடா்பான... மேலும் பார்க்க

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எப்போதும் அச்சுறுத்தல்! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி

அனைத்து காலகட்டத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓகா தெரிவித்துள்ளார்.கோவா உயர்நீதிமன்ற பார் கவுன்சில் ... மேலும் பார்க்க