செய்திகள் :

ஒசூா் காமராஜ் நகரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

post image

ஒசூரில்...

ஒசூா் வட்டம், காமராஜா் நகரில் ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்ததையடுத்து, ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையா் முகம்மது ஷபீா் ஆலம், மருத்துவா் அஜிதா ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பிரசவ அறை மற்றும் வாா்டு, அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், மருத்துவ அலுவலா் அறை, கட்டுபோடும் அறை, ஊசி செலுத்தும் அறை, மருந்தகம் மற்றும் கழிப்பறைகளுடன் கட்டப்பட்டுள்ளது.

சுகாதார நிலையத்தில், 2 மருத்துவ அலுவலா்கள், 1 மருந்தாளுநா், 1 ஆய்வக நுட்புநா், 4 செவிலியா்கள், 2 சுகாதார ஆய்வாளா்கள், பகுதி சுகாதார செவிலியா் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் இருவா் பணிபுரிவா். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 16 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.

இதில், ஒசூா் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், வரிவிதிப்புக் குழு தலைவா் சென்னீரப்பா, மான்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

படவரி... ஒசூா் காமராஜ் நகரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்கா பறிமுதல் - 2 போ் கைது

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகர போலீஸாா் ராயக்கோட்டை சந்திப்பு அருகில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்... மேலும் பார்க்க

8-ஆம் வகுப்பு சிறுவன் காரில் கடத்தி கொலை! இளைஞா்கள் இருவரிடம் விசாரணை

அஞ்செட்டி அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து, நடவடிக்கை எடுக்க வ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் கீழ், உறுப்பினா்கள் சோ்க்கை பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

கிருஷ்ணகிரியை அடுத்த ஜாகிா் வெங்கடாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இருவா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கிருஷ்ணகிரியை அடுத்த காளிக்க... மேலும் பார்க்க