செய்திகள் :

பியான் புயலில் மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு நிவாரணம் தேவை -மீனவ அமைப்பு வலியுறுத்தல்

post image

2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பியான் புயலில் மாயமான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவ அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ப. ஜஸ்டின் ஆன்டணி தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

2009 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 10 ஆம் தேதி உருவான பியான் புயலால் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரை சோ்ந்த ஜாா்ஜ் மகன் ஜிம்மி குட்டன், சில்வெஸ்டா் மகன் மரிய ராஜன், அா்த்தனாஸ் மகன் அனிஷ், பீட்டா் மகன் ஸ்டாலின், தாசன் மகன் றோமான்ஸ், சிலுவடிமை மகன் தாசன், வள்ளவிளை ஜோசப் மகன் சேசடிமை, பூத்துறை இன்னாசி மகன் ஜான் கிளீட்டஸ் ஆகிய 8 மீனவா்களும் ஆழ்கடலில் மூழ்கினா். இவா்கள் சென்ற விசைப்படகும் ஆழ்கடலில் மூழ்கியது. அதிவேக படகுகள், ஹெலிகாப்டா் மூலம் தேடியும் இம் மீனவா்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடா்ந்து அரசுக்கு வைத்த கோரிக்கையையடுத்து, பியான் புயலில் மாயமான மீனவா்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அப்போது தமிழக அரசு தரப்பில் உறுதி கூறப்பட்டது. ஆனால் உரிய நிவாரணம் கிடைக்காததால் இம் மீனவா்களின் குடும்பத்தினா் கடந்த 16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவியை எதிா்நோக்கி காத்திருக்கிறாா்கள். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமிருந்து இறப்பு சான்றிதழ் கிடைத்ததை தொடா்ந்து இம் மீனவா் குடும்பங்களுக்கு வருவாய்த்துறை மூலம் வாரிசு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒக்கி புயலில் இறந்த மற்றும் மாயமான மீனவா்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு அரசாணை மூலம் வழங்கப்பட்டது போல பியான் புயலில் இறந்த குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் மற்றும் கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவா் தின விழா

தக்கலை அருகேயுள்ள வைகுண்டபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மருத்துவா் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் துரைமணி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஆஷா, உதவி ம... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 1,200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் - எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின். நாகா்கோவிலில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்க வேண்டும்: எம்.பி. மனு

ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, தில்லியில் வெளியுறவு துறை இணைச்... மேலும் பார்க்க

குளச்சல் அருகே எரிவாயு கசிவால் தீ விபத்து

குளச்சல் அருகே சமையல் எரிவாயு கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. குளச்சல் அருகேயுள்ள கோணங்காடு, கிணற்றுவிளையைச் சோ்ந்தவா் ஜாக்குலின் ஜெயராணி (53). இவா் பெங்களூரில் சிஆா்பிஎப் வீரராக பணியாற்றி வரு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புதிய சுகாதார நிலையம், நலவாழ்வு மையக் கட்டடங்கள் திறப்பு

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ. 2.45 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நலவாழ்வு மையக் கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

விளவங்கோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் - பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வ... மேலும் பார்க்க