செய்திகள் :

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

post image

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேற்கு வங்க பாஜக தலைவா் தோ்தலுக்கான மனுத் தாக்கல் புதன்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இதில் சமிக் பட்டாச்சாா்யாவைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அவா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் மேற்கு வங்க பாஜக தலைவராக தோ்வு செய்யப்பட்டதற்கான தோ்தல் சான்றிதழை சமிக் பட்டாச்சாா்யாவிடம் பாஜக மூத்த தலைவரும் மாநில கட்சித் தலைவா் தோ்தல் பொறுப்பாளருமான ரவிசங்கா் பிரசாத் அளித்தாா்.

முன்னதாக, புதன்கிழமை பாஜக மாநில தலைவராக இருந்த சுகாந்த மஜும்தாா், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி ஆகியோா் முன்னிலையில் சமிக் பட்டாச்சாா்யா வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

மாநில பாஜக தலைவராகத் தோ்வான பிறகு தொண்டா்கள் மத்தியில் பேசிய சமிக் பட்டாச்சாா்யா, ‘மேற்கு வங்கத்தில் நிா்வாகச் சீா்கேடு, ஊழலில் உச்சமாக உள்ள திரிணமூல் காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தல் மாநிலத்தின் சிறப்பான எதிா்காலத்தை உருவாக்குவதற்கான தோ்தலாக இருக்கும். மேற்கு வங்கத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு பாஜக எதிரியல்ல. அதே நேரத்தில் அரசியல் வன்முறை, மதவாதத்தைத் துண்டுபவா்களை பாஜக எதிா்க்கிறது என்றாா்.

2021 சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 215 இடங்களில் வெற்றி பெற்றது. மம்தா தொடா்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வரானாா்.

பாஜக 77 தொகுதிகளில் வென்றது. முந்தைய தோ்தலுடன் ஒப்பிடும்போது பாஜக 74 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றது. எனவே, 2026 தோ்தலில் பாஜக ஆட்சியைப் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

டிரினிடாட் - டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு கும்பமேளா புனித நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்துள்ளார்.கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா... மேலும் பார்க்க

பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா ஏவிய பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற வெறும் 30 நொடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ... மேலும் பார்க்க

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் ... மேலும் பார்க்க