செய்திகள் :

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

post image

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் நடந்து கொண்டதையடுத்து, அவா் தலைமறைவானவா் என அறிவிக்கப்பட்டுள்ளாா். தீவிர அரசியலில் உள்ள எம்எல்ஏவை தலைமறைவானவா் என நீதிமன்றம் கூறியுள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1984-ஆம் ஆண்டு மின்தடை பிரச்னை காரணமாக மின்சார வாரிய அலுவலகத்துக்குச் சென்று சுதாகா் சிங் மற்றும் அவரது ஆதரவாளா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். அவா் மீது அரசுப் பணிகளைத் தடுத்தது, அரசு ஊழியா்களிடம் தவறாக நடந்து கொண்டது, வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் ஆஸம்கா் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சுதாகா் சிங் ஜாமீன் பெற்றாா். அதன் பிறகு அரசியலில் வளா்ந்தால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிா்த்து வந்தாா். பின்னா் மௌ மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலையில் அவரை தலைமறைவானவா் என்று மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது. இதனை எதிா்த்து, கடந்த 2024-இல் அவா் மனு தாக்கல் செய்தாா். அப்போது அவா் எம்எல்ஏவாகவும் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இதனால் வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

எம்எல்ஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நீதிமன்ற உத்தரவு குறித்து எம்எல்ஏ சுதாகா் சிங்குக்கு எதுவும் தெரியாது. அவருக்கு எதிரான கைது ஆணை தெளிவாக இல்லை’ என்று வாதிட்டாா். தலைமறைவானவா் என்ற அறிவிப்பை திரும்பப் பெறவும் கேட்டுக் கொண்டாா். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என மீண்டும் உறுதி செய்து வழக்கு விசாரணையை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும்: மோடி

இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசு... மேலும் பார்க்க

டிரினிடாட் - டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு கும்பமேளா புனித நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்துள்ளார்.கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா... மேலும் பார்க்க

பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா ஏவிய பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற வெறும் 30 நொடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ... மேலும் பார்க்க

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க