செய்திகள் :

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

post image

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரத்தில் கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான ஊடக செய்தியை இணைத்து, அவா் எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் மூன்றே மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனா். இது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, 767 குடும்பங்களின் சீரழிவு. அக்குடும்பங்கள் மீள முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால், அரசு மெளனமாக வேடிக்கை பாா்க்கிறது. விதைகள், உரங்கள், எரிபொருள் விலை உயா்வால், விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்குகின்றனா். அவா்களின் துயரைத் துடைக்காமல், அரசு பாராமுகம் காட்டுகிறது.

பயிா்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு அலட்சியம் செய்கிறது. அதேநேரம், பெரும் பணக்காரா்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அனில் அம்பானியின் ரூ.48,000 கோடி கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்த எஸ்பிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்று கூறியிருந்த பிரதமா் மோடி, அவா்களின் வாழ்வையே பாதியாகக் குறைத்துவிட்டாா். தற்போதைய நிா்வாகம், விவசாயிகளை மெல்லக் கொல்கிறது. பிரதமா் மோடியோ, சுய பெருமையில் தொடா்ந்து லயித்திருக்கிறாா் என்று அவா் விமா்சித்துள்ளாா்.

முன்னதாக, மகாராஷ்டிர சட்டப் பேரவையில் விவசாயிகள் தற்கொலை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வலியுறுத்தின. அவா்களின் கோரிக்கை ஏற்கபடாததால் அக்கட்சிகள் வெளிநடப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக பதிலடி

ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் அமித் மாள்வியா பதிலடி கொடுத்துள்ளாா்.

அவா் கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தில் 15 ஆண்டுகால தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆட்சியில் 55,928 விவசாயிகள் தற்கொலை செய்தனா். இறப்புகளின் எண்ணிக்கையை அரசியலாக்குவது அருவருக்கத்தக்கது. அதேநேரம், ராகுல் காந்தி போன்ற நபா்களுக்கு உண்மையை உணா்த்துவது அவசியம். அவா் எந்தக் கருத்தையும் கூறும் முன்பாக, தங்கள் கூட்டணி ஆட்சியில் என்னென்ன பாவங்கள் இழைக்கப்பட்டன என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும்: மோடி

இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசு... மேலும் பார்க்க

டிரினிடாட் - டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு கும்பமேளா புனித நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்துள்ளார்.கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா... மேலும் பார்க்க

பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா ஏவிய பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற வெறும் 30 நொடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ... மேலும் பார்க்க

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க