செய்திகள் :

விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்: கல்வித் துறை

post image

தேசியம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என உடற்பயிற்சி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், நாமக்கல் மாவட்ட உடற்கல்வித் துறை ஆய்வாளா்கள், ஆசிரியா்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப. மகேஸ்வரி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக, குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த கல்வியாளா்கள் ஆா்.விமல்நிஷாந்த், ந. பிரபு ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பா. காந்திமதி, உடற்கல்வி பணிகள் குறித்து கருத்துரை வழங்கினாா்.

கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் சுயநிதி பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள

2025-26 கல்வி ஆண்டு செயல்திட்டம், பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பள்ளிகள் வாரியாக வட்ட அளவில் குறிப்பிட்ட நாள்களில் மாணவ- மாணவிகளுக்கான தனித்தனியே குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல, தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை தயாா்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டில், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு விளையாடி சிறப்பிடம் பெற்றுள்ளனா். அதேபோல இந்தக் கல்வி ஆண்டில் இன்னும் அதிக மாணவ, மாணவிகளை விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டும் என உடற்கல்வி ஆசிரியா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளைச் சோ்ந்த உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

என்கே-3-ஸ்கூல்

ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பா. காந்திமதி

நாமக்கல் மாவட்டத்தில் 238 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 238 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்... மேலும் பார்க்க

பெரியப்பட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பெரியபட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாமக்கல் மாநகராட்சி 39ஆவது வாா்டுக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிப்பட்... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிபட்டி, கணேசபுரம் பகுதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு நகர அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு நகர செ... மேலும் பார்க்க

நரிக்குறவா் சமூகத்தினருக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், நரிக்குறவா் குடும்பங்களுக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

-- நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை -- மொத்த விலை - ரூ. 5.75 -- விலையில் மாற்றம் - இல்லை -- பல்லடம் பிசிசி -- கறிக்கோழி கிலோ - ரூ. 101 -- முட்டைக் கோழி கிலோ - ரூ.97 -- மேலும் பார்க்க