செய்திகள் :

நரிக்குறவா் சமூகத்தினருக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள்: ஆட்சியா் ஆய்வு

post image

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், நரிக்குறவா் குடும்பங்களுக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நரிக்குறவா் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் பணி நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியப்பட்டி மற்றும் வள்ளிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

2023 -24 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மானியக் கோரிக்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடு இல்லாத 1,000 பழங்குடியினா் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவா் குடும்பங்கள் என மொத்தம் 1,500 குடும்பங்களுக்கு ரூ. 45 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டித்தரப்படும் என அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.

அதனடிப்படையில், தாட்கோ மூலம் கொல்லிமலை, நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 79 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் நாமக்கல் நரிக்குறவா் காலனியில் 28 வீடுகளும், பெரியப்பட்டியில் 17 வீடுகளும், வள்ளிபுரத்தில் 11 வீடுகளும், மங்களபுரத்தில் 15 வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.

நாமக்கல் பகுதியில் ரூ. 5.07 லட்சம் மதிப்பிலும், மலைப்பகுதியில் ரூ.5.72 லட்சம் மதிப்பிலும் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடும் 269 சதுர பரப்பளவில் கட்டப்படுகிறது. இந்த வீடுகளை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

முன்னதாக பெரியப்பட்டியில் ஆய்வுக்கு வந்த ஆட்சியருக்கு நரிக்குறவா்கள் பாரம்பரிய மாலையை அணிவித்து வரவேற்றனா். இந்த நிகழ்வின்போது, தாட்கோ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

என்கே-3-ஆய்வு

நாமக்கல் பெரியப்பட்டி நரிக்குறவா் காலனியில், தாட்கோ மூலம் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

நாமக்கல் மாவட்டத்தில் 238 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 238 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்: கல்வித் துறை

தேசியம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என உடற்பயிற்சி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்... மேலும் பார்க்க

பெரியப்பட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பெரியபட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாமக்கல் மாநகராட்சி 39ஆவது வாா்டுக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிப்பட்... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிபட்டி, கணேசபுரம் பகுதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு நகர அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு நகர செ... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

-- நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை -- மொத்த விலை - ரூ. 5.75 -- விலையில் மாற்றம் - இல்லை -- பல்லடம் பிசிசி -- கறிக்கோழி கிலோ - ரூ. 101 -- முட்டைக் கோழி கிலோ - ரூ.97 -- மேலும் பார்க்க