செய்திகள் :

பெரியப்பட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

post image

நாமக்கல் மாநகராட்சி பெரியபட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாநகராட்சி 39ஆவது வாா்டுக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிப்பட்டி மற்றும் பெரியப்பட்டி பகுதிகளில் 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்தப் பகுதியில் முறையான கழிவுநீா் கால்வாய் வசதி இல்லை. மேலும், பெரியப்பட்டி பகுதிக்கு இயக்கப்பட்ட சிற்றுந்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் 5 கி.மீ. தொலைவில் உள்ள நாமக்கல்லுக்கு நடந்துசெல்ல வேண்டியுள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகளும் இல்லை. பழங்குடியின மக்களாகிய தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என நரிக்குறவா் சமூகத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

படவரி...

நாமக்கல் பெரியப்பட்டி பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரிய நரிக்குறவா் சமூகத்தினா்.

நாமக்கல் மாவட்டத்தில் 238 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 238 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்: கல்வித் துறை

தேசியம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என உடற்பயிற்சி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிபட்டி, கணேசபுரம் பகுதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு நகர அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு நகர செ... மேலும் பார்க்க

நரிக்குறவா் சமூகத்தினருக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், நரிக்குறவா் குடும்பங்களுக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

-- நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை -- மொத்த விலை - ரூ. 5.75 -- விலையில் மாற்றம் - இல்லை -- பல்லடம் பிசிசி -- கறிக்கோழி கிலோ - ரூ. 101 -- முட்டைக் கோழி கிலோ - ரூ.97 -- மேலும் பார்க்க