செய்திகள் :

அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

post image

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

101 வயதான அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி மூச்சுத் திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மூத்த தலைவர் அச்சுதானந்தனுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் உள்ளதே தவிர அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். வயது முதிர்வால் அச்சுதானந்தனின் உடல் மருத்துவச் சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

ஏற்கெனவே அவரது சிறுநீரக செயல்பாடு மோசமாகியுள்ளதாகவும், ரத்த அழுத்தமும் சீராக இல்லையென்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் வாதிட்ட அச்சுதானந்தன், 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராகப் பணியாற்றினார்.

கேரள அரசியலில் உயர்ந்த நபரான அச்சுதானந்தன், சமீபத்திய ஆண்டுகளில் உடல்நலப் பிரச்னைகளுடன் போராடி வருவதால் பொது வாழ்க்கையிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Former Kerala Chief Minister V S Achuthanandan, who was admitted to a private hospital after suffering a cardiac arrest, is responding to treatment, hospital sources said.

இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

மகாராஷ்டிரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி! புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில், புதியதாக 14 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அவ்வப்போது அதிகரித்து வந்த சூ... மேலும் பார்க்க

பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!

பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், ஆதார் எண்ணும் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுநாள்வரையில், பான் கார்டு விண்ணப்பிக்க பிறப்பு அல்லது அடையாளச் சான்று மட்டுமே போதுமானதாக இருந்து வந்த... மேலும் பார்க்க

இனி, மும்பையின் உயரமான கட்டடமாக முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இருக்காதா?

இந்திய தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடுதான், இன்று வரை மும்பையின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. மேலும் பார்க்க

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க