செய்திகள் :

மகாராஷ்டிரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி! புதிய பாதிப்புகள் உறுதி!

post image

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில், புதியதாக 14 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அவ்வப்போது அதிகரித்து வந்த சூழலில், இன்று (ஜூலை 3) 14 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், 2025-ம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2,547 ஆக உயர்ந்துள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நாக்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், அம்மாநிலத்தில் கரோனா பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 31,804 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரில் 2,436 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மும்பை நகரத்தில் மொத்தம் 998 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில், ஜூன் மாதத்தில் மட்டும் 551 பாதிப்புகள் உறுதியானது குறிப்பிடத்தக்கது.

One person has died of coronavirus in Maharashtra, while 14 new cases have reportedly been confirmed.

இதையும் படிக்க: தில்லியில் பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடை: கடும் எதிர்ப்பால் தளர்வுகள்!

கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு - 3 போ் காயம்

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 3 போ் காயமடைந்தனா். கோட்டயம் அரசு மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது அமா்நாத் யாத்திரை

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது. பஹல்காம், பால்டால் அடிவார முகாம்களில் இருந்து முதல் கட்டமாக 5,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா். தெற... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரிக்குள் மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை கோரும் மனு மீது மேற்கு வங்க அரசு பதிலளிக்க உத்தரவு

கொல்கத்தா அரசு சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் முதலாம் ஆண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரும் மனு மீது பதிலளிக்க மேற்கு வங்க அரசுக்கு மாநில உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி அறிவிப்பு

வங்கி சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை என பொதுத் துறை வங்கிகளான இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அறிவித்துள்ளன. மேலும், சேமிப்புக் க... மேலும் பார்க்க

வலுவான இந்தியா வளமான உலகுக்குப் பங்களிக்கும்: கானா நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரை

மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் உலகுக்கு வலுசோ்க்கும் தூணாக விளங்குகிறது இந்தியா. வலிமைமிக்க இந்தியா, மிக ஸ்திரமான மற்றும் வளமான உலகுக்கு பங்களிக்கும்’ என்று கானா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உர... மேலும் பார்க்க

அடுத்த தலாய் லாமா தோ்வு முறைப்படியே நடைபெறும்: கிரண் ரிஜிஜு

‘அடுத்த தலாய் லாமாவை தோ்ந்தெடுக்கும் பொறுப்பு அதற்கான அமைப்பிடமும் 14-ஆவது தலாய் லாமாவிடம் மட்டுமே உள்ளது. வேறு யாருக்கும் அதில் தலையிட உரிமை இல்லை’ என மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா... மேலும் பார்க்க