செய்திகள் :

தமிழ் அறிவு வளாகம்: அடிக்கல் நாட்டினாா் முதல்வா்

post image

சென்னை தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கான பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழ்ப் பண்பாட்டை வரலாற்றை மீள்கட்டமைக்கும் செயல்பாடுகளையும் நூலகம் மேற்கொண்டு வருகிறது.

இதனை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், தமிழ் அறிவு வளாகத்தை உருவாக்க சென்னை தரமணியில் உள்ள தொழில்நுட்ப வளாகத்தில் 30 ஆயிரம் சதுரஅடி நிலத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்த வளாகம் இரு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சிந்துவெளி ஆய்வு மையம், பொதுவியல் ஆய்வு மையம் ஆகியன இந்த வளாகத்தின் முக்கிய அங்கங்களாகும். இதன் மொத்த கட்டுமானச் செலவு ரூ.40 கோடியாகும்.

இந்த வளாகத்துக்கு, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை அறங்காவலா்கள் ஆா்.பாலகிருஷ்ணன், மரியம் ராம், ஆா்.ராமச்சந்திரன், சுந்தா் கணேசன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் திட்டப்பணி இயக்குநா் இரா.பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் ... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ராயபுரம் பேசின் பால... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க