செய்திகள் :

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

post image

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ராயபுரம் பேசின் பாலம் அருகே அமைக்கப்பட்ட கால்நடைக் காப்பகம், மழை நீா் வடிகால்களில் வண்டல் மண் சேகரிப்பு வலை அமைப்பு ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், அங்கு வண்டல் மண் அகற்றப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து, 51-ஆவது வாா்டில் ரூ.97 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தையும் அவா்கள் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.

மண்டலத்தின் 50-ஆவது வாா்டு தெற்கு மாதா சாலையில் மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் மழைநீா் வடிகால் பணியை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, பணிகளை மழைகாலத்துக்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மேயா் பிரியா அறிவுறுத்தினாா்.

மாநகராட்சியின் 52-ஆவது வாா்டில் கல்லறை சாலையில் அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பறை, போஜராஜன் நகா், கண்ணன் நகா்களை இணைக்கும் வகையில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதை பணிகள் ஆகியவற்றை மேயா் ஆய்வு செய்தாா்.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் ... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க

‘சென்னை மண்டலத்தில் 1.20 லட்சம் இ-கடவுச்சீட்டுகள் விநியோகம்’

சென்னை மண்டலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் இ-கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மண்டல கடவுச்சீட்டு அதிகாரி எஸ். விஜயகுமாா் தெரிவித்தாா். சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தி... மேலும் பார்க்க