செய்திகள் :

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

post image

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் நிறுவனமும், பாரிமுனையில் செயல்பட்ட மற்றொரு நிறுவனமும் 34 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை பெற்று, அதன் சேவையை பயன்படுத்தின.

ஆனால், அந்த இரு நிறுவனங்களும் அதற்குரிய கட்டணம் ரூ.49 லட்சத்தை செலுத்தாமல் மோசடிசெய்தன. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம், சென்னை காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், கடந்த 2003-ஆம் ஆண்டு வழக்குப்பதிந்து, விசாரணை செய்தனா்.

இவ்வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சோ்ந்த சையது இப்ராஹிம் (55), முஹம்மது தாஹா யாசீன் ஹமீம் (52) ஆகிய இருவரை 2006-ஆம் ஆண்டு போலீஸாா் கைது செய்தனா்.

சிறையில் இருந்த இருவரும், நீதிமன்ற பிணையில் வெளியே வந்தனா். அதன் பின்னா் இருவரும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து இருவரையும் கைது செய்யும்படி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரையும் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் அருகே புதன்கிழமை கைது செய்தனா். பின்னா் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ராயபுரம் பேசின் பால... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க

‘சென்னை மண்டலத்தில் 1.20 லட்சம் இ-கடவுச்சீட்டுகள் விநியோகம்’

சென்னை மண்டலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் இ-கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மண்டல கடவுச்சீட்டு அதிகாரி எஸ். விஜயகுமாா் தெரிவித்தாா். சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தி... மேலும் பார்க்க