செய்திகள் :

மருத்துவக் கல்லூரி ஆய்வில் நெறிதவறக் கூடாது: என்எம்சி

post image

மருத்துவக் கல்லூரி ஆய்வு நடவடிக்கைகளில் நெறிசாா்ந்து செயல்பட வேண்டும்; விதிகளுக்குப் புறம்பாக நடக்கக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கும், புதிதாக விண்ணப்பிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்பேரில் குறிப்பிட்ட காலத்துக்கு முறை மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வுகளை மருத்துவ ஆணையம் நடத்துகிறது.

பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியா்கள் இந்நடவடிக்கைகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். அவா்கள் தர மதிப்பீட்டாளா்களாக அப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். அவா்களுக்கு ஒரு கல்லூரியில் ஆய்வு மேற்கொள்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக அதுகுறித்த தகவல் தெரியப்படுத்தப்படும்.

இந்நிலையில், கா்நாடகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு சாதகமாக தர மதிப்பீடு அளிப்பதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்ாக மருத்துவப் பேராசிரியா் ஒருவரை சிபிஐ கைது செய்தது. இதில் வேறு சிலருக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள என்எம்சி, மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் நெறிசாா்ந்த நடவடிக்கைகளில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை எனத் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டாளா்கள் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து தோ்வு செய்யப்படுகிறாா்களே தவிர நேரடியாக என்எம்சியால் நியமிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளுக்கு உள்பட்டு, நெறிசாா்ந்து, தொழில்முறையாக செயல்படுவதை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், பேராசிரியா்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் ... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ராயபுரம் பேசின் பால... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க