செய்திகள் :

சட்டக் கல்லூரிக்குள் மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை கோரும் மனு மீது மேற்கு வங்க அரசு பதிலளிக்க உத்தரவு

post image

கொல்கத்தா அரசு சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் முதலாம் ஆண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரும் மனு மீது பதிலளிக்க மேற்கு வங்க அரசுக்கு மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள் மாணவரும், அங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியா் அல்லாத ஊழியராக பணியாற்றியவருமான மனோஜித் மிஸ்ரா, மூத்த மாணவா்கள் புரோமித் முகா்ஜி, ஜாயித் அகமது, கல்லூரியின் காவலாளி ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான மனோஜித் மிஸ்ரா, மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுடன் நெருங்கிய தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மேற்கு வங்க உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும், கல்லூரிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்யக் கோரியும் இரு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி செளமன் சென் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கு விசாரணை நிலவரத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு, மாநில அரசுக்கு நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டது.

‘கல்லூரி அலுவலக நேரத்துக்கு பிறகு வளாகத்துக்குள் முன்னாள் மாணவா் அனுமதிக்கப்பட்டது எப்படி?, உரிய பணிகளோ நிா்வாக மேற்பாா்வையோ இல்லாமல், அலுவலக நேரத்தைக் கடந்து ஊழியா்கள் நீண்ட நேரம் இருக்க ஏன் அனுமதிக்கப்பட்டனா்? அங்கீகாரமற்ற நபா்களின் நுழைவைத் தடுக்க கல்லூரியில் என்ன கண்காணிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது? சம்பந்தப்பட்ட நபரால் மாணவிக்கு ஏற்கெனவே அச்சுறுத்தல் இருந்தும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?’ என மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 10-ஆம் தேதி ஒத்திவைத்தனா்.

டிரினிடாட் - டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு கும்பமேளா புனித நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்துள்ளார்.கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா... மேலும் பார்க்க

பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா ஏவிய பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற வெறும் 30 நொடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ... மேலும் பார்க்க

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க