செய்திகள் :

பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!

post image

பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், ஆதார் எண்ணும் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுநாள்வரையில், பான் கார்டு விண்ணப்பிக்க பிறப்பு அல்லது அடையாளச் சான்று மட்டுமே போதுமானதாக இருந்து வந்தது. ஆனால், இனிமேல் ஆதார் எண் இருந்தால் மட்டுமே பான் கார்டு விண்ணப்பிக்க முடியும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

ஜூலை முதல்தேதியில் இருந்து அமலுக்கு வந்த இந்த நடைமுறையால் டிஜிட்டல் இந்தியா முயற்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், வரி ஏய்ப்பு, போலி பான் கார்டுகளைத் தடுக்கவும், அடையாளச் சரிபார்ப்பு, வரி தாக்கல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற முடியும் என்றும் அரசு தெரிவித்தது.

அரசின் தரவுகளின்படி, 2024 மார்ச் வரையில் நாட்டில் சுமார் 74 கோடி பேர் பான் கார்டு வைத்திருப்பதாகவும், அவற்றில் 60.5 கோடி கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க டிசம்பர் 31, 2025 வரை அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்க தாமதம் ஏற்பட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படலாம்.

ஒருவேளை இணைக்கப்படவில்லையென்றால், பான் கார்டு செயலிழந்து விடும். பான் கார்டு செயலிழந்தால், வருமான வரி தாக்கல், மியூச்சுவல் ஃபண்டுகள் உள்பட வங்கிகளில் நிதிப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது.

இதையும் படிக்க:இஸ்ரேல் தாக்குதலில் பறக்கும் ஈரான் கார்கள்! கட்டடங்கள் தரைமட்டம்!

Aadhaar now mandatory for PAN

கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை! குற்றவாளி குறித்த திடுக் தகவல்!

கொல்கத்தா சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மனோஜித் மிஸ்ரா பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி! புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில், புதியதாக 14 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அவ்வப்போது அதிகரித்து வந்த சூ... மேலும் பார்க்க

இனி, மும்பையின் உயரமான கட்டடமாக முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இருக்காதா?

இந்திய தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடுதான், இன்று வரை மும்பையின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. மேலும் பார்க்க

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க