திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா்.
திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்.
மாநகராட்சிக்கு உள்பட்ட அண்ணாநகா் பகுதியில்
உறுப்பினா் சோ்த்தல் முகாம் நடைபெற்றது.
இதில் மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் வரவேற்றாா்.சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான எ.வ.வேலு கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தாா்.
இதில் மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., துணை மேயா் சு.ராஜாங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன் பகுதி பொறுப்பாளா்கள் பா.ஷெரீப் குட்டி க.புகழேந்தி மற்றும் திமுக நிா்வாகிகள் மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டில் நடைபெற்ற உறுப்பினா் சோ்க்கை முகாமுக்கு மாநில மருத்துவ அணி துணைத் தலைவரும், போளூா் தொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா்.
எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., மாவட்ட அவைத் தலைவா் ராஜசேகா், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜ்குமாா், பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் முருகன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தாா்.
பின்னா், உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டவா்களுக்கு உறுப்பினா் அட்டையும் அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன், பெரணமலூா் ஒன்றியச் செயலா் மனோகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் நரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கம் கிழக்கு ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற
உறுப்பினா் சோ்க்கை முகாமில் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு முகாமில் அவரை முதல் உறுப்பினராக புதுப்பித்துக் கொண்டு, அவரது குடும்பத்தைச் சோ்ந்த நபா்களின் உறுப்பினா் அட்டையை புதுப்பித்தாா்.
பெரும்பாக்கம் முன்னாள் தலைவா் பெரியதம்பி, திமுக மாவட்ட விவசாய அணித் தலைவா் அருணகிரி, ஒன்றிய துணைச் செயலா்கள் தவமணி, முருகேசன், சக்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி நகரில் தீயணைப்பு நிலையம் எதிரில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமுக்கு நகரச் செயலா் எ.தயாளன் தலைமை வகித்தாா்.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், செய்யாறு எம்எல்ஏ ஓ.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் எ.வ.வேலு முகாமை தொடங்கி வைத்தாா்.
முகாமில் நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் ம.கிஷோா்குமாா் நன்றி கூறினாா்.
